குருப்பெயர்ச்சி பலன்கள்!
மேஷம்
உங்களின் ராசிக்கு 8-ம் வீட்டில் மறைந்திருந்து எதையும் எட்டாக்கனியாக்கியதுடன், மன அழுத்தத் தையும் தந்துகொண்டிருந்த குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை உங்கள் ராசிக்கு பாக்கியாதிபதி வீடான 9-ம் வீட்டில் நுழைவதால், வாழ்வில் புதிய வியூகங்களை அமைத்து முன்னேறத் தொடங்குவீர்கள். தொட்ட காரியங்களெல்லாம் துலங்கும். தள்ளிப்போன சுப நிகழ்ச்சிகள் இப்போது கூடி வரும். அறிவுபூர்வமாகவும் அனுபவபூர்வ மாகவும் செயல்படுவீர்கள்.
குழந்தைபாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக் கும். மனைவிவழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.
குரு பகவானின் பார்வைஸ குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால், சோகமாக இருந்த உங்களின் முகம் இனி மலர்ச்சி அடையும். அழகும் இளமையும் கூடும். புதிய வாகனம் வாங்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும்.
உங்களின் ராசிக்கு 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். விலையுயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். உங்களின் ராசிக்கு 5-ம் வீட்டை குரு பார்ப்பதால் முடிவுகள் எடுப்பதில் இருந்த குழப்பம், தடுமாற்றம் நீங்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். பாகப்பிரிவினை சுமுகமாகும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் நட்சத்திரமான மூல நட்சத்திரத்தில் செல்வதால் செலவுகள் அதிகமாகும். அசுவினி நட்சத்திரக்காரர்கள் அலைச்சலைக் குறைத்து உடல்நலனில் கவனம் செலுத்துங்கள். யோகா, தியானம் கை கொடுக்கும்.
1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்களின் தன சப்தமாதிபதியான சுக்கிரனுக்குரிய பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால், குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். பணவரவு உண்டு. ஆனால், பரணி நட்சத்திரக்காரர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.
6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்கள் பூர்வபுண்ணியாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1-ம் பாதத்தில் செல்வதால், அரசு வகையில் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றிபெறுவீர்கள். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். கார்த்திகை 1-ம் பாதத்தில் பிறந்தவர்கள் எதிலும் கவனமாகச் செயல்பட வேண்டும். மகளின் திருமணத்துக்காக கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை உருவாகும்.
மகரத்தில் குரு பகவான்: 28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 10-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும், வக்கிரமாகியும் அமர்வதால் புதிய தெம்பு பிறக்கும்.
வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். கொடுக்கல் வாங்கலில் சுமுகமான நிலை ஏற்படும். கடையை விரிவுபடுத்துவீர்கள். ஷேர், உணவு, எண்டர் பிரைசஸ், ஜுவல்லரி, மர வகைகளால் ஆதாயமடைவீர்கள்.
உத்தியோகத்தில் உங்களைப் பற்றி குறை கூறியவர்களுக்குப் பதிலடி கொடுப்பீர்கள். தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. சிலருக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும். பெண்களுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரனும் அமைந்து திருமணம் சிறப்பாக முடியும்.
மாணவ மாணவியர் நல்ல கல்வி நிறுவனத்தில் மேற்படிப்பைத் தொடங்குவார்கள். மொழித்திறனை வளர்த்துக்கொள்வார்கள். போட்டிகளில் பரிசு பெறுவார்கள். கலைத்துறையினருக்கு இனி பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். அவர்களுடைய படைப்புகளை அரசு கௌரவிக்கும்.
பரிகாரம்: சஷ்டி தினங்களில் சிறுவாபுரி முருகப் பெருமானை வழிபட்டு வாருங்கள்; சந்தோஷம் பெருகும்.
ரிஷபம்
குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 8-ம் வீட்டில் மறைந்தாலும் ஆட்சிபெற்று அமர்வதால் அலைச்சலுடன் ஆதாயத்தையும் தருவார். பயணங்களும் தவிர்க்க முடியாத செலவுகளும் இருந்துகொண்டேயிருந்தாலும் வருமானம் குறையாது. உங்களிடம் இருக்கும் சில பலவீனங்களையும் பிடிவாதப் போக்கையும் கொஞ்சம் மாற்றிக்கொள்வது நல்லது.
ராஜதந்திரமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட கோணத்தில் தீர்வு காண்பீர்கள். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். வேலைச்சுமையால் தூக்கம் குறையும்.
குரு பகவானின் பார்வை: குரு பகவான் 2-ம் வீட்டைப்பார்ப்பதால் பணப்புழக்கம் கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பூர்வீக சொத்து கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தைபாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். குரு உங்களின் சுகஸ்தானத்தைப் பார்ப்பதால் தாயாரின் ஆரோக்கியம் சீராகும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள்.
புண்ணியதலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஒரு சொத்தை விற்று மற்றொன்று வாங்குவீர்கள்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் நட்சத்திரமான மூல நட்சத்திரத்தில் செல்வதால் சேமிக்க முடியாதபடி அடுத்தடுத்த செலவுகள் இருந்துகொண்டேயிருக்கும். சிலர் உங்களுடைய உழைப்பைப் பயன்படுத்தி முன்னேறுவார்கள்.
1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்கள் ராசிநாதனும் சஷ்டமாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் ஓரளவு பணம் வரும். சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள்.
6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்களின் சுகாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1-ம் பாதத்தில் செல்வதால் எதிர்ப்புகள் குறையும். வீண் வாக்குவாதங்கள் வேண்டாம்.
மகரத்தில் குரு பகவான்: 28.3.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 9-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும் வக்கிரமாகியும் அமர்வதால் மனஇறுக்கங்கள் குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.
வியாபாரத்தில் பழையதவறுகள் நிகழ்ந்து விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். தரமான பொருள்களை விற்பனை செய்வதன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலியுங்கள். கடையை இருக்கின்ற இடத்திலேயே தொடர்வது நல்லது. இரும்பு, கடல் உணவுகள், ஹோட்டல் மற்றும் ரசாயன வகைகளால் லாபம் அதிகரிக்கும்.
உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்கவேண்டி வரும். உயரதிகாரிகள் உங்களின் தவற்றைச் சுட்டிக்காட்டினால் மாற்றிக்கொள்வது நல்லது.
பெண்கள் சிறிய சந்தர்ப்பங்களைக்கூடப் பயன்படுத்தி முன்னேறுவார்கள். திருமண விஷயத்தைப் பெற்றோரிடம் ஒப்படைத்துவிடுவது நல்லது. மாணவ மாணவியர் கடைசிநேரத்தில் படிக்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள். உங்களின் தனித்திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள். சக மாணவர்களிடம் கவனமாகப் பழகுங்கள்.
கலைத்துறையினர் போராடி சின்னச்சின்ன வாய்ப்புகளைப் பெறவேண்டி வரும். மூத்த கலைஞர்களை அரவணைத்துச் செல்வது நல்லது.
பரிகாரம்: பிரதோஷ நாளில், சிதம்பரத்தில் அருள்பாலிக்கும் திருப்புலீஸ்வரரை வழிபட்டு வாருங்கள்; வளம் பெருகும்.
மிதுனம்
குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களின் ராசியை நேருக்குநேராகப் பார்க்கவிருப்பதால், எதிலும் உங்கள் கை ஓங்கும். வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். வீண் சண்டை, விவாதங்களிலிருந்து ஒதுங்குவீர்கள். மறைந்துகிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.
கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். சிலர் வங்கிக் கடன் உதவி கிடைத்து புது வீடு கட்டி குடிபுகுவார்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். புது பதவிக்கு உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும்.
குரு பகவானின் பார்வை: குரு பகவான் உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். ஷேர் மார்க்கெட் மூலமாகப் பணம் வரும். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் நட்சத்திரமான மூல நட்சத்திரத்தில் செல்வதால், பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள்.
1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்களின் விரயாதிபதியும் பூர்வ புண்ணியாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால், பேச்சில் கனிவு பிறக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். திடீர்ப் பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள். சிலர் வீடு மாறுவார்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவார்கள்.
6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1-ம் பாதமான தனுசு ராசியில் செல்வதால் நெருக்கடிகளைச் சமாளிக்கும் சக்தி உண்டாகும்.
மகரத்தில் குரு பகவான்: 28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 8-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும், வக்கிரமாகியும் அமர்வதால் எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
வியாபாரத்தில் புதிய முதலீடுகளை இப்போது துணிந்துசெய்யலாம். சில சூட்சுமங்களையும், ரகசியங்களையும் தெரிந்துகொண்டு லாபம் ஈட்டுவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி, பதிப்பகம், கட்டட உதிரிப் பாகங்கள், அரிசி மண்டி வகைகளால் நல்ல லாபம் கிடைக்கும்.
உத்தியோகத்தில் புதிய உற்சாகம் பிறக்கும். உங்களின் தனித்தன்மை வெளிப்படும்.அதிகாரிகளின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதமின்றி கிடைக்கும். சிலர் உத்தியோகம் சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவார்கள்.
பெண்கள் கூடுதலாக ஒரு மொழியைக் கற்றுக் கொள்வார்கள். புதிய இடத்தில் வேலை கிடைக்கும். உயர்கல்வி, மேற்படிப்பு தொடர விரும்புபவர்களுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர கடிதம் வரும். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும்.
மாணவ மாணவியருக்கு அவர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். விளையாட்டில் பரிசு பெறுவார்கள்.
கலைத்துறையினருக்கு எதிர்பார்த்துக் காத்திருந்த வாய்ப்பு இப்போது கூடிவரும். வருமானம் உயரும். பிரபல கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள்.
பரிகாரம்: ஏகாதசி தினங்களில், திருமலை வையாவூர் பிரசன்னவேங்கடேசரை வணங்கி வாருங்கள்; சகல சுபிட்சமும் கைகூடும்.
கடகம்
குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 6-ம் வீட்டில் மறைகிறார். சகட குரு சங்கடங்கள் தருவாரோ என்று கலங்க வேண்டாம். குரு பகவான் ஆட்சிபெற்று அமர்வதால் நல்லதே நடக்கும்.
வாழ்க்கையின் சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியாதபடி செலவுகள் இருக்கும். கணவன் மனைவி பரஸ்பரம் விட்டுக்கொடுத்துப்போவது நல்லது. சிலர் பூர்வீக சொத்தை விற்றுவிட்டு வசதியான பகுதியில் குடியேறுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். உதவி செய்கிறேன் என்று சொல்லியிருந்தவர்கள் உங்களுக்கு உதவாமல் போகக்கூடும். எனவே, மாற்றுவழியை யோசித்து வையுங்கள். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
குரு பகவானின் பார்வை: குரு பகவான் குடும்பஸ்தானத்தைப் பார்ப்ப தால் பணவரவு உண்டு. குடும்பத்தில் நிம்மதி உண்டு. அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். வாகனத்தைச் சீர்செய்வீர்கள். மகளுக்குத் திருமணம் நிச்சயமாகும். குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் புதிய இடத்தில் வேலை கிடைக்கும். குரு 12-ம் வீட்டைப் பார்ப்பதால் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் நட்சத்திரமான மூல நட்சத்திரத்தில் செல்வதால் திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். புதிய முதலீடுகள் செய்து சொந்தமாகத் தொழில் தொடங்குவீர்கள். அயல்நாட்டிலிருக்கும் உறவினர், நண்பர்களால் ஆதாயமடைவீர்கள்.
1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்களின் சுகஸ்தானாதிபதியும் லாபாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் தாயாரின் உடல்நிலை சீராகும். தாய்வழிச் சொத்துகள் கைக்கு வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளாலும், விருந்தினர்களின் வருகையாலும் வீடு களைகட்டும்.
6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்கள் தனாதிபதி சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1-ம் பாதத்தில் செல்வதால் எதிர்பார்த்த வகையில் பணவரவு உண்டு. இங்கிதமாகப் பேசி முக்கிய காரியங்களை முடிப்பீர்கள்.
மகரத்தில் குரு பகவான்: 28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 7-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும் வக்கிரமாகியும் அமர்வதால் உங்களுடைய திறமைகள் வெளிப்படும். தள்ளிப்போன அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். நட்புவட்டம் விரிவடையும்.
வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்து லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்கள் முரண்டு பிடிப்பார்கள். தொழில் போட்டிகள் அதிகமாகும். சிமென்ட், கணினி உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபமடைவீர்கள்.
உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். பதவி உயர்வு தாமதப்படும். புதிய உத்தியோக வாய்ப்புகள் வந்தாலும் பொறுத்திருந்து செயல்படுவது நல்லது.
பெண்கள் உயர்கல்வியில் சாதிப்பார்கள். பழைய நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். பெற்றோருடன் இருந்துவந்த கருத்துமோதல் நீங்கும். மாணவ மாணவியர் யோகா, தியானம் செய்து நினைவாற்றலை வளர்த்துக்கொள்ளுங்கள். உயர்கல்வியில் விளையாட்டுத்தனம் வேண்டாம். நுழைவுத்தேர்வு, போட்டித் தேர்வுக்கு முழுநேரம் ஒதுக்கித் தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
கலைத்துறையினர் தங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கியைப் பெறுவார்கள். மூத்த கலைஞர் களிடம் சில நுணுக்கங்களைக் கற்றுத் தெளிவீர்கள்.
பரிகாரம்: கோபிச்செட்டிப்பாளையம் அருகில் பாரியூரில் அருளும் ஸ்ரீகொண்டத்து காளியை வழிபட்டு வாருங்கள்; நன்மைகள் பெருகும்.
சிம்மம்
போற்றுதல், தூற்றுதல் இரண்டையும் ஒன்றாகவே எண்ணும் நீங்கள், யாருக்காகவும் உங்களின் கொள்கைகளை மாற்றிக்கொள்ளாதவர். முன்வைத்த காலைப் பின்வைக்காத நீங்கள், திடீர் முடிவுகளை எடுத்து எதிரிகளை திக்குமுக்காடச் செய்வீர்கள்.
உங்களின் ராசிக்கு சுகஸ்தானமான 4-ம் வீட்டில் அமர்ந்து வீண் விரயத்தையும் ஏமாற்றங்களையும் தந்த குரு பகவான், 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்வதால் புதிய பாதையில் பயணிப்பீர்கள். குடும்பத்தின் அடிப்படை வசதி, வாய்ப்புகள் உயரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும்.மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கும் நல்ல இடத்தில் பெண் அமைவார்.
குழந்தைபாக்கியம் உண்டாகும். பூர்வீக சொத்தில் உங்களின் பங்கு கைக்கு வரும். சொந்தமாக இடம் வாங்கும் யோகம் உண்டாகும். குலதெய்வக் கோயிலுக்குச் செய்யவேண்டிய நேர்த்திக்கடனை இப்போது நிறைவேற்றுவீர்கள்.
குரு பகவானின் பார்வை: உங்களின் ராசிக்கு 9-ம் வீட்டை குரு பார்ப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். 11-ம் வீட்டை குரு பார்ப்பதால் உங்களின் கௌரவம் கூடும். புதிய பதவிக்கு உங்களின் பெயர் பரிந்துரை செய்யப்படும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் நட்சத்திரமான மூல நட்சத்திரத்தில் செல்வதால் மகம் நட்சத்திரக்காரர்கள் உணர்ச்சிவசப்படாமல் செயல்படுவது நல்லது. எதிர்மறை எண்ணங்களுக்கு இடம்கொடுக்காதீர்கள். உடல்நலனில் கவனமாக இருப்பது நல்லது. பூரம், உத்திரம் 1-ம் பாதம் நட்சத்திரக்காரர்களுக்கு ஓரளவு நற்பலன்கள் உண்டாகும்.
1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்கள் ஜீவனாதிபதியான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால், பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். மகம், உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சிகள் பலிதமாகும்.
6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிநாதன் சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1-ம் பாதத்தில் அமர்வதால் உடல்நலனில் கவனமாக இருப்பது நல்லது.
மகரத்தில் குரு பகவான்: 28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 6 – ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும் வக்கிரமாகியும் அமர்வதால் எதிர்ப்புகள் அதிகமாகும். பழைய கடனை அடைக்க புதிய வழி பிறக்கும்.
வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. இங்கிதமாகவும் இதமாகவும் பேசி வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். சிலர் புதிய தொழில் அல்லது புதிய கிளைகள் தொடங்குவீர்கள். மெடிக்கல், வாகனம், கல்விக் கூடங்கள், கமிஷன் வகைகளால் லாபமடைவீர்கள். சிலர் சொந்த இடத்துக்கு மாற்றுவீர்கள்.
உத்தியோகத்தில் உங்களின் கை ஓங்கும். பெரிய பதவியில் அமர்வீர்கள். வெகுநாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு.
பெண்கள் உயர்கல்வியில் வெற்றிபெறுவார்கள். தடைப்பட்ட திருமணம் நல்ல விதத்தில் முடியும். மாணவ மாணவியரின் நினைவாற்றல், அறிவாற்றல் கூடும். அனைத்துப் பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் குவிப்பார்கள். உயர்கல்வியில் வெற்றியுண்டு.
கலைத்துறையினர் புகழடைவார்கள். சிலருக்கு விருது கிடைக்கும். உதாசீனப்படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும். உங்களின் படைப்புத் திறன் அதிகரிக்கும்.
பரிகாரம்: கரூர் மாவட்டம், பாளையம் எனும் ஊரில் அருளும் கதிர்நரசிங்கப்பெருமாளை வழிபட்டு வாருங்கள்; முன்னேற்றம் உண்டாகும்.
கன்னி
குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து செயல்படும் சாமர்த்தியத்தைக் கற்றுக்கொள்வீர்கள். உங்களின் பலம், பலவீனத்தைத் தெரிந்துகொள்வது நல்லது. கணவன் மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பது நல்லது.
வீடு, மனை வாங்கும்போது சான்றிதழ்களைச் சரிபார்த்து வாங்குங்கள். உங்கள் சொத்தை விற்பதாக இருந்தால், ஒரே தவணையில் பணத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். ஒருபக்கம் பணவரவு உண்டு என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் துரத்திக்கொண்டேயிருக்கும். தாய்வழி உறவினர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
குரு பகவானின் பார்வை: குரு உங்களின் ராசிக்கு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். பயணங்களால் பயனுண்டு. மறைந்துகிடந்த திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் வரும். குரு உங்களின் உத்தியோகஸ்தானத்தைப் பார்ப்பதால் சிலருக்குப் புதிய இடத்தில் வேலை கிடைக்கும். சம்பளப் பாக்கி கைக்கு வரும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் நட்சத்திரமான மூல நட்சத்திரத்தில் செல்வதால் எதிலும் நாட்டமின்மை, ஏமாற்றங்கள், திடீர்ச் செலவுகள் வரலாம். முன்னெச்சரிக்கையுடன் செயல்படுங்கள். மகான்கள், சித்தர்களின் அறிமுகம் கிடைக்கும்.
1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்கள் தனம் மற்றும் பாக்யாதிபதியான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால், எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நிகழும்.
6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்கள் விரயாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1-ம் பாதத்தில் செல்வதால் அறிவுபூர்வமாக முடிவுகள் எடுப்பீர்கள். அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.
மகரத்தில் குரு பகவான்: 28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 5 வீடான மகர ராசியில் அதிசாரமாகியும், வக்கிரமாகி யும் அமர்வதால் மனஇறுக்கங்கள் குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். திருமணம் கைகூடும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
வியாபாரத்தில் ஏற்றஇறக்கங்கள் இருந்துகொண்டேயிருக்கும். அவ்வப்போது மாறிவரும் சந்தை நிலவரத்துக்கேற்ப முதலீடு செய்து லாபம் ஈட்டப் பாருங்கள். ரியல் எஸ்டேட், உணவு, துணி வகைகளால் லாபமடைவீர்கள்.
உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். உயரதிகாரிகளின் உத்தரவுகளை உடனே செயல்படுத்துங்கள்.கூடுதல் நேரம் ஒதுக்கி நீங்கள் உழைக்க வேண்டியிருக்கும்.சம்பள உயர்வும் தாமதமாகக் கிடைக்கும்.
பெண்களுக்குத் திருமணம் கைகூடும். பெற்றோரின் முடிவுகளை ஏற்றுக்கொள்ளுங்கள். சிலருக்கு வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும். உயர்கல்வியிலும் முன்னேற்றம் உண்டு. மாணவ மாணவியர் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தின் கல்விப் பிரிவில் சேர அதிகம் செலவு செய்யவேண்டி வரும்.
கலைத்துறையினரின் கற்பனைத்திறன் வளரும்.உங்களின் படைப்புகளுக்குக் காப்புரிமை செய்து கொள்வது நல்லது. மூத்த கலைஞர்களின் ஆதரவு முன்னேற்றம் தரும்.
பரிகாரம்: புதன் கிழமைகளில், காஞ்சி மாவட்டம் குன்றத்தூரில் அருளும் திருஊரகப்பெருமாளை வழிபட்டு வாருங்கள்; தொட்டதெல்லாம் துலங்கும்.
துலாம்
குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்வதால் எதையும் திட்டமிட்டு செய்யுங்கள். எந்த ஒரு வேலையையும் முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் போராடி முடிக்க வேண்டி வரும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். திடீரென்று அறிமுகமானவரை நம்ப வேண்டாம்.
கணவன் மனைவிக்குள் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். மற்றவர்களை நம்பி முக்கிய விஷயங்களை ஒப்படைக்காமல், நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. அக்கம்பக்கம் வீட்டாருடன் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
சிலர் உங்களை நேரில் பார்க்கும்போது நல்லவர் களாகவும் பார்க்காதபோது உங்களைப் பற்றி வேறுமாதிரியாகவும் பேசுவார்கள். கவனமாகப் பழகுங்கள். உறவினர்கள், நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். இடைவெளிவிட்டு பழகுவது நல்லது.
குரு பகவானின் பார்வை: குரு உங்களின் ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் மனைவி வழியில் உதவிகள் உண்டு. குரு 9-ம் வீட்டைப் பார்ப்பதால் பணவரவுக்குக் குறைவிருக்காது. தந்தைவழிச் சொத்துகள் கைக்கு வரும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். தீராத பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.
1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்களின் ராசியாதிபதியும் அஷ்டமாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் திடீர்ப் பணவரவு உண்டு. வாகனம் வாங்குவீர்கள். உறவினர்களின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள்.
6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்களின் லாபாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1-ம் பாதத்தில் செல்வதால் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை மனத்தில் பிறக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும்.
மகரத்தில் குரு பகவான்: 28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 4-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும் வக்கிரமாகியும் அமர்வதால் தாயாரின் உடல்நலனில் கவனமாக இருங்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும்.
வியாபாரத்தில் சில சூட்சுமங்களையும், ரகசியங்களையும் தெரிந்துகொண்டு அதற்கேற்ப லாபம் ஈட்டுவீர்கள். பழைய பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். தரமான பொருள்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கை யாளர்கள் வருவார்கள். கட்டட உதிரிப் பாகங்கள், ஸ்டேஷனரி, பெட்ரோகெமிக்கல், டிராவல்ஸ் வகைகளால் ஆதாயமடைவீர்கள்.
உத்தியோகத்தில் சின்னச் சின்ன அலைக்கழிப்புகள் இருக்கும். சக ஊழியர்களின் கடின உழைப்பால் தடைபட்ட வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். உத்தியோகத் தில் பதவி உயர்வு கிடைக்கும். சம்பளப் பாக்கி கைக்கு வரும். உயரதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள்.
பெண்களுக்குத் தடைப்பட்ட உயர் கல்வியைத் தொடரும் வாய்ப்பு கிடைக்கும். நல்ல இடத்தில் வரன் அமையும். போட்டித்தேர்வுகளில் வெற்றிபெற்று நல்ல வேலையில் அமர்வார்கள். மாணவ மாணவியர் விரும்பிய நிறுவனத்தில் எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேருவார்கள். ஆசிரியரிடம் தயங்காமல் உங்களின் சந்தேகங்களைக் கேட்டுத் தெளியுங்கள்.
கலைத்துறையினருக்குப் பெரிய வாய்ப்புகள் தேடி வரும். யதார்த்தமான உங்களின் படைப்புகளுக்குப் பாராட்டுகள் கிடைக்கும்.
பரிகாரம்: செங்கல்பட்டு அருகிலுள்ள திருவடிசூலம் பைரவரை வழிபட்டு வாருங்கள்; எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும்