மின்சாரம் இல்லாமல் சிறுவன் உடலில் பல்ப் வைத்தாலே எரியும் அதிசயம்!
28 Jul,2019
தெலங்கானா மாநிலத்தில் மின்சாரம் இல்லாமல், சிறுவனின் உடலில் வைத்தாலே பல்புகள் எரிவதை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.
தெலங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டம் சிரசன்னா ராம் நகரை சேர்ந்தவர் ஷேக் சாந்த் பாஷா. கடந்த வாரம் அவர் கடையிலிருந்து வாங்கி வந்த பல்பை எடுத்து, அவரது இருந்த மகனும், மகளும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் பல்பை கையில் வைத்திருந்த பொழுது மின்சாரம் இல்லாமல் எரிவதை கண்டு ஆச்சரியம் அடைந்தனர். வேறு ஒரு பல்பை வாங்கி வந்து சோதித்தபோதும், அந்த பல்பு அவர்கள் உடலில் பட்டவுடன் எரியத் தொடங்கியது. இதேபோன்று ஷேக்சாந் பாஷாவின் உடலில் வைத்தாலும் லைட் எரிந்தது.
இந்த தகவல் பரவியதையடுத்து, கிராம மக்கள் பல்புகளை அவர்கள் மீது வைத்து சோதனை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.