இயேசு பெண்ணாக உயிர்ந்தெழுந்தார்: கைது செய்யப்பட்ட உறுப்பினர்கள்
28 Jul,2017
............................
“பெண் இயேசு வழிபாட்டு முறை” உறுப்பினர்கள் 18 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
1990-ஆம் ஆண்டு “த சர்ச் ஆப் அல்மைட்டி காட்” என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.
சீனாவில் இயேசு பெண்ணாக உயிர்ந்தெழுந்தார் என்று இது போதிக்கிறது.
இந்த வழிபாட்டு முறையினரை அடக்குவதற்கு சீன அதிகாரிகள் அடிக்கடி நடவடிக்கை எடுத்துள்ளனர். பல ஆண்டுகளாக இந்த வழிபாட்டு முறையை சேர்ந்த பலரை கைது செய்துள்ளனர்.
தற்போதைய கைது நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆட்களை தேர்ந்தெடுப்பதற்கு இந்த வழிபாட்டு முறை பயன்படுத்திய கணினிகள் மற்றும் புத்தகங்களை சீன அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியை “சிவப்பு டிராகன்” என்று வர்ணிக்கும் இந்த வழிபாட்டுமுறை கம்யூனிசத்தை வெளிப்படையாக எதிர்ப்பதாகவும் உள்ளது.
2014 ஆம் ஆண்டு மெக்டோனல் உணவகத்தில் நடைபெற்ற கொலைக்கு பிறகு, இந்த வழிபாட்டு முறையை சேர்ந்த பல உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். இரண்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.