வங்கியின் கண்ணாடி கதவில் சிக்கிய 5 வயது சிறுவனின் விரல்கள். அதிர்ச்சி வீடியோ
21 Jun,2014
சீனாவில் உள்ள வங்கி ஒன்றில் கண்ணாடி கதவின் இடுக்கில் சிறுவன் ஒருவனின் விரல்கள் சிக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த காட்சியின் வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு சீனாவில் உள்ள Anhui Province, என்ற இடத்தில் உள்ள வங்கி ஒன்றில் சிறுவன் ஒருவன் கண்ணாடி கதவை திறக்க முடியாமல் முன்பக்கமாகவும் பின்பக்கமாகவும் நகர்த்தி உள்ளான். பின்னர் ஒருவழியாக கதவை திறந்து வெளியேறிவிட்டான். அந்த சமயத்தில் கண்ணாடி கதவின் அருகே நின்றிருந்த ஐந்து வயது சிறுவன் ஒருவன் தன்னுடைய கையை கதவின் மற்றொரு முனையில் வைத்திருந்ததால் சிறுவனின் மூன்று விரல்கள் கதவின் இடுக்கில் சிக்கிக்கொண்டது.
இதனால் வலிதாங்க முடியாமல் அந்த சிறுவன் பயங்கரமாக கதறி அழுதான். உடனடியாக வங்கியில் இருந்து பாதுகாப்பு அதிகாரி அந்த சிறுவனின் விரல்களை மிகுந்த சிரமப்பட்டு விடுவித்தார். அதன்பின்னர் சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். இந்த சம்பவத்தை வங்கியில் இருந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது பெரும் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. நமது வாசகர்களுக்காக இதோ அந்த அதிர்ச்சி வீடியோ