விஜய்யின் பொங்கல் வாழ்த்து
‘கண்டாங்கி கண்டாங்கி’ பாடலின் மூலம் தனது ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து சொல்கிறார் விஜய்.
தலைவா படத்தில் வாங்கண்ணா, வணக்கங்கண்ணா என விஜய் பாடிய பாடல்தான் அந்தப்படத்தின் சூப்பர்ஹிட் பாடல்.
விஜய் சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவார். இப்போது மீண்டும் டி.இமானுடன் சேர்ந்திருக்கிறார்.
ஜில்லா படத்திற்காக ‘கண்டாங்கி, கண்டாங்கி’ என ஸ்ரேயா கோஷலுடன் இணைந்து விஜய் பாடியிருக்கும் இந்தப்பாடல்தான் அவரின் ரசிகர்களுக்கு 2014ம் ஆண்டின் பொங்கல் வாழ்த்தாக இருக்கப்போகிறது.
இந்தப்பாடலை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருக்கிறார்.
அதுவும் 2002ல் வெளியான யூத் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து வைரமுத்து மீண்டும் விஜய்க்கு பாடல் எழுதுவது அதிசயமான நிகழ்வுதான் என்கிறது கொலிவுட் வட்டாரம்.
‘ஐ’ படத்தில் வில்லனுடன் இணைந்த எமி ஜாக்சன்!
‘ஐ’ படத்தில் வில்லனுடன் இணைந்து கலக்கியுள்ளாராம் எமி ஜாக்சன்.
கொலிவுட்டில் ஷங்கரின் இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகிவரும் திரைப்படம் 'ஐ'.
ஆஸ்கார் புகழ் ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் விக்ரம், எமி ஜாக்சன், உபேன் பட்டேல் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
படத்தின் வில்லன் நடிகர் உபேன் உடன் இணைந்து பாடல் காட்சி ஒன்றில் நடிக்கிறார் எமி.
எமியின் பால்வெள்ளை நளினத்தை தனக்கே உரிய அழகியலோடு பாடல் காட்சியில் இணைத்து இயக்குனர் ஷங்கர் பதிவு செய்துள்ளார்.
இந்த பாடல் காட்சி அடுத்த வருடம் வெளியாகும் போது பரபரப்பாக பேசப்படும் என்று படக்குழு எதிர்பார்க்கிறது.
மேலும் விக்ரமுக்கு வித்தியாசமான வில்லன் வேடத்தையும் கொடுத்திருப்பதாக பட வட்டாரம் கூறுகிறது.
விருது மழையில் குளிக்கும் 'நான் ஈ' ராஜமௌலி
விருது மழையில் தத்தளிக்கிறாராம் ‘நான் ஈ’ இயக்குனர் ராஜமௌலி.
தென்னிந்திய பட உலகின் பிரபல இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று ஹிட் அடித்த படம் 'நான் ஈ'
படம் தேசிய விருதை அள்ளியதொடு சர்வதேச படவிழாக்களில் பாராட்டையும் பெற்றுள்ளது.
எட்டாவது டொரோண்டோ பட விழாவில் 9 விருதுகளை நான் ஈ படம் குவித்துள்ளது.
இதுகுறித்து ராஜமௌலி கூறுகையில், இத்தருணத்தில் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன்.
படத்தில் 'ஈ'யின் பழிவாங்கும் படலத்தை பதிவு செய்துள்ளோம்.
இப்படம் சிறந்த சண்டைக்காட்சி, கலகல கொமடி, யதார்த்தமான கதை சொல்லல், ஸ்பெஷல் எபெக்ட்ஸ், சிறந்த படம், சிறந்த வில்லன் நடிகர், சிறந்த ஹீரோ பாத்திரம், எடிட்டிங் என பல பிரிவுகளில் விருதுகளை குவித்திருப்பதை எண்ணி உற்சாகம் அடைகிறோம் என்று கூறியுள்ளார்.
ஓவியாவின் சபதம் என்னாச்சு?
இரட்டை நாயகிகள் நடிக்கும் படத்தில் நடிக்கமாட்டேன் என்ற சபதத்தை ஓரங்கட்டிவிட்டாராம் ஓவியா.
மதயானைத் கூட்டம், புலிவால் போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார் ஓவியா.
இவர் ஜில்லுன்னு ஒரு சந்திப்பு படத்தில் நடிக்கும் போது ஏற்பட்ட கசப்புணர்வால் சுட சுட பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார்.
இனிமேல் இரண்டு கதாநாயகி வேடங்களில் நடிக்க மாட்டேன் என்பதுதான் அந்த பேட்டியின் சாரம்சம்.
இப்படத்தில் இன்னொரு நாயகியாக நடித்த தீபாஷாவின் கதாபாத்திரத்தை பெரிதாக காட்டிவிட்டு தன் கதாபாத்திரத்தை சுருக்கிவிட்டார்கள் என்று குற்றம்சாட்டினார்.
இதனால் இரட்டை நாயகிகள் நடிக்கும் படத்தில் நடிக்கமாட்டேன் என்று சபதம் எடுத்தார்.
ஆனால் கிருஷ்ணா இயக்க இருக்கும் ‘ஆனா இல்ல’ என்றொரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார், இதில் ஓவியாவுடன் இன்னொரு நாயகியும் நடிக்கிறாராம்.
இதுகுறித்து கேட்டால் கதை நல்லாயிருக்கு. அதைவிட எனக்கான கதாபாத்திரம் அருமையா இருக்கு என்றும் இயக்குனர் சொன்னதை செய்வார்னு நம்பிக்கையும் உள்ளது எனவும் கூறியுள்ளார் ஓவியா.