உக்ரைன் அதிபர் நகருக்குள் உலா !எந்த போர் குற்றத்தையும் செய்யவில்லை; ரஷ்யா

06 Apr,2022
 

 
 
எந்த போர் குற்றத்தையும் செய்யவில்லை; ரஷ்யா
 
ரஷ்யா எந்தவொரு போர் குற்றத்தையும் செய்யவில்லை. புச்சா பகுதியில் கிடக்கும் உடல்கள், ரஷ்ய படையினரால் கொல்லப்படவில்லை என ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்ய தூதர் தெரிவித்துள்ளார்.
 
04 Apr 2022
3:07 PM IST
உக்ரைனுக்கு பிரிட்டன் பிரதமர்
 
பிரிட்டன் பிரதமர் போரீஸ் வெளியிட்டுள்ள வீடியோவில்; உக்ரைன் மக்களின் எழுச்சியை புடின் தடுக்க முடியாது. அது போல் அவரால் உக்ரைனை கைப்பற்றவும் முடியாது. நாங்களும் ஆயுதம் உள்ளிட்ட எங்களால் முடிந்த உதவிகளை வழங்கியுள்ளோம். உக்ரைன் மக்கள் மீண்டு வருவர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
12:15 PM IST
கைகள் கட்டப்பட்ட நிலையில் பிணங்கள்
 
உக்ரைனின் புச்சா நகரில் ஒரு இடத்தில் 10 க்கும் மேற்பட்ட பிணங்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் நெற்றியில் சுடப்பட்டு கிடந்தன.
 
11:40 AM IST
மொத்தமாக பிணங்கள் புதைப்பு
 
உக்ரைனின் புச்சா நகரில் நூற்றுக்கணக்கான பிணங்கள் சிதறி கிடப்பதாகவும், பல பிணங்கள் ஒரே இடத்தில் புதைக்கப்படுவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் மொத்தமாக புதைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 
7:39 AM IST
போர்க்குற்றம்; உலக நாடுகள் கண்டனம்
 
கொடூரமான போர்க் குற்றம் நடந்துள்ளது; ஜெர்மனி கண்டனம். போர்க்கள காட்சிகளின் படங்கள் தாங்க முடியாத அளவில் இருக்கிறது என பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் தெரிவித்துள்ளார். போர்க்குற்றத்துக்கு ஆதாரமாக வெறுக்கத்தக்க தாக்குதல் நடந்துள்ளது என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
 
03 Apr 2022
3:52 PM IST
உக்ரைனின் கிழக்கு பகுதியில் தாக்குதல்
 
உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷ்யா புதிய தாக்குதலை துவக்கி இருக்கிறது. துறைமுக நகரான ஓடேசாவில் ரஷ்யா இன்று ஏவுகணை தாக்குதலை நடத்தி இருக்கிறது. இங்கு பலத்த சப்தத்துடன் பெரும் குண்டு வெடித்தாதாகவும் தொடர்ந்து கரும்புகை கிளம்பி வான் அளவை தொட்டதாகவும் அங்குள்ள உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இங்குள்ள எண்ணெய் கிடங்கை அழிக்கும் நோக்கில் ரஷ்யா ஏவுகணையை வீசியிருக்கலாம் என கூறப்படுகிறது.
 
8:41 AM IST
ராணுவ பணி கட்டாயம் !
 
உக்ரைனில் வசிக்கும் மக்களை ராணுவத்தில் இணைந்து பணியாற்றுமாறு கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இஐ.டி. மாணவன் இவான் என்பவர் இந்த புகாரை கூறியுள்ளார். வாழ்வில் துப்பாக்கியை கையில் ஏந்தாத என்னை துப்பாக்கி எடுக்க சொல்கின்றனர் என்கிறார்.
 
7:30 AM IST
கீவ் நகர் முழுவதும் உக்ரைன் கட்டுப்பாட்டில் வந்தது
 
உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து ரஷ்யப் படைகள் வாபஸ் பெறப்பட்டு வருவதால், உக்ரைன் படைகள் கிவ் நகரைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளன என்று உக்ரைன் துணைப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
02 Apr 2022
2:59 PM IST
பிரிட்டனும் தாக்கியது !
 
உக்ரைனில் ரஷ்ய போர் துவங்கியதில் இருந்து இரு படையினர் இடையேகடும் போராட்டம் நடந்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நேட்டோ நாடுகள் தங்களின் ஆதரவை தெரிவித்து கூடுதல் ஆயுதங்களை வழங்கி வருகிறது. இதற்கிடையில் உக்ரைனின் கிழக்கு லுகான்ஸ்க் ரஷ்யாவின் எம்.ஐ28என்ற ஹெலிகாப்டரை பிரிட்டன் ஏவுகணை தாக்கி வீழ்த்தியது.
 
8:32 AM IST
ரஷ்யாவின் எண்ணை நிறுவனம் மீது தாக்குதல்
உக்ரைனின் எல்லை பகுதியில் அமைந்துள்ள ரஷ்ய பெல்குரோட் என்ற பகுதியில் உக்ரைன் ஹெ லிகாப்டர்கள் சென்று குண்டுகளை போட்டதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. இதனை ரஷ்ய, உக்ரைன் படையினர் உறுதி செய்யவில்லை .
 
01 Apr 2022
10:57 AM IST
நேட்டோ அதிகாரிகள் கவலை
 
உக்ரைனில் மீண்டும் ரஷ்யா தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக நேட்டோ அதிகாரிகள் கூறியுள்ளனர். உக்ரைன் கிழக்கு பகுதியை தாக்கக்கூடும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளது. மேலும் 2 ஆயிரம் பேர் கொண்ட ராணுவ வீரர்களை அனுப்ப ரஷ்யா தயாராகி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
31 Mar 2022
3:09 PM IST
அச்சமுறும் ஆலோசகர்கள்
 
உண்மையை சொல்ல ரஷ்ய அதிபர் புடினின் ஆலோசகர்கள் அஞ்சுவதாக அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்று தெரிவிக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் புடினின் முக்கிய ஆலோசகர் ஒருவர் பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
10:28 AM IST
ராணுவ தளபதி -புடின் இடையில் மோதலா ?
 
உக்ரைன் மீது நடத்திய போரில் எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிட்டவில்லை என்பதால் ரஷ்ய ராணுவ தளபதிகள், அதிபர் புடின் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான உளவுத்துறை தகவல் அமெரிக்காவுக்கு கிடைத்துள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரம் தெரிவிக்கிறது. போரை நடத்த சில தளபதிகளே முன்மொழிந்ததாகவும், இதனை புடின் புறக்கணித்திருக்கலாமோ என்று தற்போது சிந்திப்பதாகவும் கூறப்படுகிறது.
 
9:04 AM IST
மரியூபோல் நகரில் ஒரு நாள் போர் நிறுத்தம்
 
உக்ரைனின் மரியூபோல் நகரில் இன்று மனிதாபிமான அடிப்படையில் இன்று (மார்ச்.31) ஒரு நாள் மட்டும் போர் நிறுத்தம் செய்யப்படுகிறது. மக்கள் வெளியேறுவதற்கு ஏதுவாக ராணுவ நடவடிக்கை நிறுத்தப்படுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மரியூபோல் நகரம் ரஷ்ய கட்டப்பாட்டுக்குள் இருப்பதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.
 
7:11 AM IST
யூரோக்களையே அனுமதிக்க வேண்டும்; ஜெர்மனி
 
ரஷ்யாவிடமிருந்து ஐரோப்பிய நாடுகள் வாங்கும் இயற்கை எரிவாயுவிற்கு ஈடாக யூரோக்களையே செலுத்த ரஷ்யா அனுமதிக்க வேண்டும். மாறாக ரூபில்களை செலுத்தச் சொல்வது, அச்சுறுத்துவது போல் உள்ளது என ஜெர்மனி தெரிவித்துள்ளது.
 
6:25 AM IST
உக்ரைன் மீது தாக்குதலை தொடரும் ரஷ்யா
கீவ்: ராணுவ நடவடிக்கைகளை குறைத்துக் கொள்வதாக ரஷ்யா கூறியிருந்த நிலையில் உக்ரைனின் வடக்கு பகுதியில் தாக்குதலை மீண்டும் துவங்கி உள்ளது. செனிசிவ் மற்றும் கீவ் நகரங்களில் புதன் இரவு முதல் தாக்குதலை ரஷ்யா துவங்கியுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது
 
30 Mar 2022
5:15 PM IST
முன்னேற்றமில்லை
ரஷ்யா அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், தாங்கள் என்ன முன்மொழிகிறோம் என்பதை எழுத்துப்பூர்வமாக அளிப்பதாக உக்ரைன் கூறியுள்ளது மட்டுமே சாதகமாக விஷயம். தற்போது வரை அதனை எங்களால் பெற முடியவில்லை. மற்ற விஷயங்களை தற்போது எதுவும் கூற முடியாது. தற்போதைய நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
 
5:15 PM IST
நிபந்தனை
பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் ரஷ்ய அதிபர் புடின் தொலைபேசியில் பேசினார். அப்போது, உக்ரைன் வீரர்கள் சரணடைந்தால், மரியபோல் நகர் மீதான தாக்குதல் நிறுத்தப்படும் என புடின் கூறியதாக ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.அதேநேரத்தில், அந்நகரில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்கு உதவும் திட்டம் குறித்து பரிசீலனை செய்வதாக புடின் உறுதி அளித்துள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 
8:55 AM IST
அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு
ரஷ்யாவில் இருக்கும் தங்கள் நாட்டினர் உடனே வெளியேற அமெரிக்க வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. ரஷ்யா தடுத்து வைக்கலாம் என்பதால் அமெரிக்கர்கள் உடனே வெளியேற வேண்டும். ரஷ்யாவுக்கு பயணம் செய்வதை அமெரிக்கர்கள் தவிர்க்க வேண்டும் எனவும் அமெரிக்க வெளியுறுவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
 
29 Mar 2022
8:48 PM IST
நேட்டோ உச்சி மாநாட்டிற்கு உக்ரைன் அழைப்பு
ஏப்ரல் 6-7 தேதிகளில் திட்டமிடப்பட்ட நேட்டோ உச்சிமாநாட்டிற்கு உக்ரைன் அழைத்துள்ளது. இந்த உச்சிமாநாடு பிரஸ்ஸல்ஸில் நடைபெறவுள்ளது. ஜார்ஜியா, பின்லாந்து, ஸ்வீடன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் கொரியா குடியரசு ஆகியவை உறுப்பினர் அல்லாத பிற நாடுகள் அழைக்கப்படுகின்றன.
 
5:49 PM IST
படைகளை குறைக்கும் ரஷ்யா
உக்ரைன் தலைநகர் கீவ் அருகே செர்னிகிவ் பகுதியில் ரஷ்யா படைகளை குறைக்க உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மேலும், துருக்கியில் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாக ரஷ்ய குழுவினர் தகவல் தெரிவித்தனர்.
 
3:04 PM IST
பிற நாடுகளிடம் ஆயுதம் கேட்கிறார்
 
ரஷ்யாவுக்கு அஞ்சி பிற நாட்டவர்கள் எங்களுக்கு உதவுவதில் அஞ்ச வேண்டாம். மாஸ்கோவுக்கு பதிலடி கொடுத்திட தைரியமான ஆயுதங்களை வழங்குங்கள். அச்சம் சிலரை கட்டிப்போடுகிறது. ஆயுதங்கள் வரவில்லை என்பதால் உக்ரைனியர்கள் சாகக்கூடாது. இவ்வாறு உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறியுள்ளார்.
 
2:17 PM IST
நாய், பூனை கறி சாப்பிடும் ரஷ்ய படையினர் ?
 
கார்கோவ்: போர் நடந்து வரும் உக்ரைன் நாட்டில் 30 லட்சத்திற்கும் மேலானவர்கள் அகதிகளாக சென்றுள்ளதாக ஐ .நா., புள்ளி விவர அறிக்கை தெரிவிக்கிறது. இவர்கள் உடமைகளை கொண்டு செல்லவே சிரமப்படும் போது பாசமாக வளர்த்த வீட்டு பிராணிகளை பிரிய மனமில்லாமல் பெரும் கவலைக்குள் சிக்கி உள்ளனர். இதனை கண்ட போலந்து நாட்டில் கார்கோவ் நகரில் தன்னார்வலர் தம்பதியினர் வீட்டு வளர்ப்பு பிராணிகளுக்கென ஒரு முகாம் அமைத்துள்ளார். இதில் அகதிகள் பிராணிகளை விட்டு செல்லலாம். இலவசமாக பத்திரமாக பார்த்து கொள்கின்றனர். அதிலும் ரஷ்யா படையினர் உணவு தட்டுப்பாடு காரணமாக நாய், பூனை, எலியை கொன்று சாப்பிட துவங்கி இருப்பதாகவும் பரவுகிற ஒரு தகவல் வீட்டு பிராணி வளர்ப்போரை பெரும் அதிர்ச்சிக்குள் தள்ளியுள்ளது.
 
10:16 AM IST
ரஷ்யா, உக்ரைன் 6 வது சுற்று பேச்சு
ரஷ்யா , உக்ரைன் இடையிலான 6 வது சுற்று பேச்சு இன்று துருக்கியில் நடக்கிறது. இதற்கான பேச்சு குழுவினர் இன்று காலையில் துருக்கியில் கூடினர்.
 
28 Mar 2022
3:17 PM IST
பிரிட்டன் வர்த்தகம் தொடர்பான உத்தரவு
 
ரஷ்யாவுடன் பொது நிறுவனங்கள் எந்தவொரு வர்த்தக தொடர்பையும் வைத்து கொள்ள வேண்டாம். என பிரிட்டன் அரசு உத்தரவிட்டுள்ளது.
 
1:39 PM IST
கியூ நகரில் ஆன்லைன் வகுப்புகள்
 
ஒரு புறம் போர் நடந்தாலும் மாணவர்கள் பள்ளி படிப்பை கருதி ஆன்லைனில் பாடம் துவக்கி இருப்பதாக கியூ நகர மேயர் விட்டாலி கிளிட்ஸ்கோ கூறியுள்ளார். ராணுவ சட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும் கல்விப்பணி மிக முக்கியமானதாகும். என்றும் தெரிவித்துள்ளார் மேயர்.
 
11:49 AM IST
அமைதியை எதிர்நோக்கி.,
 
கடும் போர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்தால் ரஷ்யா உக்ரைனுடன் உடனடி பேச்சு நடத்த வேண்டும். தாமதிக்காமல் அமைதியை நிலைநாட்ட பேச்சு மிக அவசியம். அமைதியை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறியுள்ளார்.
 
6:22 AM IST
உக்ரைனின் விவ் நகரில் ரஷ்யா தொடர் ஏவுகணை தாக்குதல்
விவ்: உக்ரைன் ரஷ்யா இடையே 33 நாட்களாக போர் நீடித்து வருகிறது. உக்ரைன் நகரின் விவ் நகரில் ரஷ்யா நடத்திய தொடர் ஏவுகணை தாக்குதலில் பலத்த சேதம் ஏற்பட்டது. அந்நகரில் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.இந்நிலையில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே துகுக்கியில் பேச்சுவார்த்தை நடக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
27 Mar 2022
8:05 PM IST
உக்ரைனை இரண்டாக உடைக்க ரஷ்யா முயற்சி
உக்ரைனை இரண்டாக உடைக்க ரஷ்யா முயற்சி செய்யலாம் என்று உக்ரைனின் ராணுவ உளவுப்புரிவு தலைவர் கைரிலோ புடானோவ் தெரிவித்துள்ளார்.
 
3:14 PM IST
சீயோலில் ஆர்பாட்டம்
 
ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக தென்கொரியா தலைநகர் சீயோலில் ஆர்பாட்டம் நடந்தது.
 
1:01 PM IST
இன்றைய (மார்ச்-27) காட்சிகள்
4இல் 1 வது புகைப்படம்
Photo Gallery
Photo Gallery
Photo Gallery
Photo Gallery
Next
8:30 AM IST
உக்ரைன் மக்களோடு நாங்களும் நிற்கிறோம்: பைடன்
 
போலந்து சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மக்களிடம் உரையாற்றுகையில்: உக்ரைனில் ரஷ்யா வெற்றி பெற முடியாது. உக்ரைனில் ஒரு அங்குல இடத்தைகூட விட்டு தர மாட்டார்கள். அங்கு நடப்பது சுதந்திரத்திற்கான போராட்டம். உக்ரைனில் ஜனநாயகம் நசுக்கப்பட்டுள்ளது. ரஷ்ய தாக்குதலுக்கு பின்னர் நேட்டோ நாடுகளின் உறவுகள் மற்றும் நெருக்கம் அதிகரிக்கிறது. உக்ரைனில் புடின் தவறு செய்துள்ளார். அவர் உடனடியாக போரை நிறுத்த வேண்டும். உக்ரைன் மக்களோடு நாங்கள் இணைந்து நிற்கிறோம். உலக நாடுகள் அமைதியை பின்பற்ற ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். போர் காரணமாக உலக அளவில் பொருளாதார பாதிப்பு ஏற்படும். மக்களை கொன்று புடின் இறைச்சி வியாபாரியாக மாறியுள்ளார். அவர் இன்னும் அதிகாரத்தில் நீடிக்க முடியாது. உலக நாடுகள் ஒன்று சேர்ந்து ரஷ்யாவை எதிர்க்க வேண்டும். இவ்வாறு பைடன் பேசினார். முன்னதாக உக்ரைன் அகதிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்.
 
26 Mar 2022
9:32 PM IST
உக்ரைன் அகதிகளை சந்தித்தார் ஜோ பைடன்
 
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போலந்து தலைநகர் வார்சாவில் உள்ள பிஜிஇ நரோடோவி ஸ்டேடியத்திற்கு சென்றார். அங்கு உக்ரேனிய அகதிகள் மற்றும் மனிதாபிமான உதவி செய்யும் ஊழியர்களை சந்தித்தார்.
 
1:18 PM IST
1,200 ஏவுகணைகள் தாக்குதல்
 
உக்ரைன் போரில் கடந்த 30 நாட்களில் 1200 ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியிருப்பதாக ஒரு விவர அறிக்கை தெரிவிக்கிறது.
 
10:42 AM IST
பலத்த அடி கொடுத்தோம் !
 
ரஷ்ய படையினருக்கு உக்ரைன் பலத்த அடி கொடுத்து சொல்லக்கூடிய அளவுக்கு ரஷ்யாவுக்கு இழப்புகளை ஏற்படுத்தியுள்ளோம். என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறியுள்ளார்.
 
9:33 AM IST
ரஷ்ய ராணுவ ஜெனரல் டிஸ்மிஸ்
 
ஜெனரல் விளாடிஸ்லாவ் யார்சோவ் என்ற ரஷ்ய ஜெரனல் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். மேலும் அவர் வீட்டு சிறையில் வைக்க உத்தரவிடப்பட்டது. உக்ரைன் மீதான போரை நேர்த்தியாக கொண்டு செல்லாமல் பின்னடவை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
8:31 AM IST
7 ராணுவ ஜெனரல்கள் பலி
 
உக்ரைனில் ரஷ்யாவின் 7 ராணுவ ஜெனரல்கள் பலியாகி இருப்பதாக லண்டன் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவிக்கிறது.
 
25 Mar 2022
10:23 PM IST
ரஷ்ய போர்க்கப்பலை அழித்த உக்ரைன் படைகள்
பெர்டியன்ஸ்கில் ரஷ்ய போர்க்கப்பலை உக்ரேனியப் படைகள் அழித்ததாக அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.
 
9:44 PM IST
ரஷ்ய ராணுவ அதிகாரி பலி
கீவ்: உக்ரைன் ரஷ்யா இடையேயான போரில் மூத்த ரஷ்ய ராணுவ அதிகாரி கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.கடந்த ஒரு மாத காலமாக உக்ரைன் ரஷ்யா இடையே கடுமையான போர் நிலவி வருகிறது. தற்போதைய நிலையில் உக்ரைன் நாட்டின் தெற்கு பகுதியில் நடைபெற்று வந்த சண்டையின் போது ரஷ்ய நாட்டின் ராணுவ அதிகாரி கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்து உள்ளது
 
9:01 PM IST
3.7 மில்லியன் மக்கள் வெளியேற்றம்
உக்ரைனில் ரஷ்யா தாக்குதலால் இதுவரை சுமார் 3.7 மில்லியன் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறியுள்ளனர் என்று ஐநா அகதி அதிகாரி தெரிவித்துள்ளார்.
 
3:00 PM IST
சிறுவர்கள் பலி ; உக்ரைன் அரசு கவலை
 
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் துவங்கிய நாள் முதல் 134 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 184 பேர் காயமுற்றதாகவும் இதில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் உக்ரைன் சட்ட அமைச்சகம் கூறியுள்ளது.
 
12:27 PM IST
தாமதமான ஆதரவு: செலன்ஸ்கி கவலை
 
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த துவங்கியும் ஐரோப்பிய நாடுகள் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை. கொஞ்சம் தாமதமான முடிவுகள் ரஷ்யாவுக்கு தைரியத்தை கொடுத்துள்ளது. இவ்வாறு உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறியுள்ளார்.
 
8:57 AM IST
உக்ரைன் தனி ஆள் இல்லை: பிரிட்டன் பிரதமர்
 
உக்ரைன் தனியாக போராடவில்லை. நாங்களும் இருக்கிறோம் என பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் கூறியுள்ளார். நேட்டோ மாநாட்டில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: ரஷ்ய அதிபர் புடின் அமைதியை விரும்பவில்லை. மாறாக உக்ரைன் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறார். தாக்குதல் தொடரும் பட்சத்தில் பிரிட்டன் தனது ஆயுத உதவியை அதிகரிக்கும். அணு ஆயுதங்கள் பயன்படுத்தினால் அவர் பேரழிவை சந்திக்க நேரிடும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 
5:49 AM IST
6,000 ஏவுகணைகள் வழங்க பிரிட்டன் முடிவு
உக்ரைனுக்கு, பிரிட்டன் சார்பில் ஏற்கனவே, 4,000க்கும் அதிகமான பீரங்கி தகர்ப்பு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 6,000 ஏவுகணைகளை வழங்க பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது.
 
24 Mar 2022
10:19 PM IST
ரஷ்யா ரசாயண குண்டுகளை பயன்படுத்தும் அபாயம்: உக்ரைன் அதிபர்
ரஷ்யா ராசாயண குண்டுகளை பயன்படுத்தும் அபாயம் உள்ளது என உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு கூறினார். மேலும் ரஷ்யாவிற்கு எதிரான போரில் வெற்றி பெறவதற்கும் உக்ரைனில் அமைதியை மீட்டெடுப்பதற்கும் நேட்டோ நாடுகள் கட்டுப்பாடற்ற ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
 
3:00 PM IST
சீனி, வெங்காயம் விலை விர்ர்.,
உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்யாவில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகி இருக்கின்றனர்.
 
12:12 PM IST
உக்ரைன் துறைமுகம் தீ பற்றி எரிகிறது
 
பெர்டியான்ஸ்க் என்ற துறைமுகத்தில் ரஷ்ய கப்பல்கள் கடும் தாக்குதலை துவக்கியது. இதில் துறைமுகம் முழுவதும் தீ பற்றி எரிவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
10:58 AM IST
" ஒரு மாத போர்" - மக்களை அழைக்கிறார் உக்ரைன் அதிபர்
 
கியூ: உக்ரைன் மீது ரஷ்யா போர் நடவடிக்கையை துவக்கி இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது. ரஷ்யாவை எதிர்கொண்டு ஒரு மாதம் தொடர்ந்து போராடி வரும் நமது தைரியத்தை பாராட்டி மக்கள் அனைவரும் வீதிகளுக்கு வந்து தங்களின் ஆதரவை தெரிவியுங்கள் என அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கி கேட்டு கொண்டுள்ளார். மேலும் உலகம் முழுவதும் மக்கள் தங்களின் ஆதரவை எங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
10:03 AM IST
உக்ரைனுக்கு பிரிட்டன், சுவீடன் ஆயுத உதவி
 
உக்ரைனுக்கு பிரிட்டன், சுவீடன் ஆயுதங்கள் அனுப்பின. பிரிட்டன் 6 ஆயிரம் ஏவுகணைகளையும், சுவீடன் ராணுவ டாங்குகளை வீழ்த்தும் 5 ஆயிரம் ஏவுகணைகளையும் அனுப்பி வைத்துள்ளன.
 
9:10 AM IST
ரஷ்ய தீர்மானம் தோல்வி
மனித நேயம் நிலவரம் குறித்த தீர்மானத்திற்கு இந்தியா உள்ளிட்ட 13 நாடுகள் ஆதரவு அளிக்காததால் ஐ.நா., பாதுகாப்பு குழு கூட்டத்தில் தோல்வியை தழுவியது ரஷ்யா.
 
8:40 AM IST
ரஷ்யா பின்வாங்குமா ?
 
உக்ரைனின் அருகில் உள்ள போலந்து நாட்டில் அமெரிக்கா தன் படைகளை இறக்கி உள்ளது. இங்கு பயிற்சியில் ஈடுபட்டுள்ளதால் கூடுதல் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் ரஷ்யா போரை துவக்கி 4 வாரங்களுக்கு மேல் ஆகியும் எதிர்பார்த்த வெற்றி கிட்டாததால் அந்நாட்டு அதிபர் புடின் கவலை அடைந்துள்ளார். ரஷ்ய படையை, இத்தனை நாள் சமாளித்து களத்தில் நிற்கிறது என்றால் உக்ரைனுக்கு இது பெரும் வெற்றியாகவே கருதப்படுகிறது. ரஷ்ய வீரர்கள் பலரை இழந்துள்ளதால் போரை நிறுத்தலாமா என்றும் யோசிக்க துவங்கி இருப்பதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. 3 நாளில் போர் நிறுத்த அறிவிப்பு வரலாம் என கூறப்படுகிறது.
 
23 Mar 2022
5:08 PM IST
ஜெர்மனி தலையிடாது
ஜெர்மனி சான்சிலர் ஒலாப் ஷோல்ஜ் கூறுகையில், உக்ரைன் மீது தாக்குதல் நடந்து வரும் நிலையில், ஜெர்மனி ராணுவம் அதில் தலையிடாது. இந்த போரில் நேடோ ஒரு அங்கம் இல்லை. இது தொடர்பாக ஐரோப்பிய கூட்டாளிகள் மற்றும் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்.உக்ரைனுக்கு நிதி மற்றும் ராணுவ உதவி செய்துள்ளது. ஆயிரகணக்கான உக்ரைன் அகதிகளை ஜெர்மனிக்கு வந்துள்ளனர் எனக்கூறிய அவர், ரஷஅயா எண்ணெய், காஸ், நிலக்கரியை புறக்கணிக்க வேண்டும் என்பதற்கு ஆதரவு அளிக்க மாட்டோம் எனக்கூறினார்.
 
5:07 PM IST
பிரான்ஸ் உதவி
ரஷ்ய தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனக்கு உதவும் வகையில் மீட்பு வாகனங்களை பிரான்ஸ் அனுப்பி வைத்துள்ளது. 100 தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு வீரர்கள், 11 தீயணைப்பு வானங்கள், 16 மீட்பு வாகனங்கள், 49 டன் சுகாதார மற்றும் அவசர கருவிகளுடன் 23 டிரக்குகள் உக்ரைனுக்கு செல்வதாக பிரான்ஸ் வெளியுறுவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
4:54 PM IST
அச்சுறுத்தல்
அமெரிக்காவின் பெண்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், ரஷ்யாவின் அறிவிப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. அணுசக்தி வைத்துள்ள நாடு செயல்படும் விதம் இதுவல்ல என்றார்.
 
4:54 PM IST
ரஷ்யா எச்சரிக்கை
ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது: உக்ரைனுக்கு எதிரான தாக்குதலில் அணுஆயுதங்களை பயன்படுத்துவதை ரஷ்யா விரும்பவில்லை. உள்நாட்டு பாதுகாப்புக்கு கொள்கை உள்ளது. அது வெளிப்படையானது. அனைவரும் தெரிந்து கொள்ளலாம். அதேநேரத்தில், ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், அணுஆயுதங்களை பயன்படுத்துவோம் எனக்கூறினார்.
 
4:00 PM IST
மஸ்கோவில் ரெட் கிராஸ் தலைவர்
உக்ரைன் மீதான தாக்குதல் காரணமாக தடைபட்டுள்ள மனிதாபிமான பணிகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த சர்வதேச ரெட் கிராஸ் தலைவர் பீட்டர் மயுரர், ரஷ்யா சென்றுள்ளார். அங்கு அவர், அந்நாட்டு வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சரை சந்திக்க உள்ளார்.
 
3:53 PM IST
ரஷ்யா சலுகை
உக்ரைனுக்கு எதிரான தாக்குதலில் பங்கேற்பவர்களுக்கு ராணுவ வீரர்கள் என்ற சலுகை அளிக்கும் சட்டம் ரஷ்யா பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது. இந்த அந்தஸ்தை பெறுபவர்களுக்கு மாத சம்பளம், வரி சலுகை, மருத்துவ சிகிச்சையில் முன்னுரிமை உள்ளிட்டவை கிடைக்கும்.
 
3:53 PM IST
நிவாரண பணியளர்களை தடுத்த ரஷ்யா
மரியபோல் நகரில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக வந்தவர்களை ரஷ்ய வீரர்கள் தடுத்து நிறுத்தியதாக உக்ரைன் குற்றம்சாட்டி உள்ளது
 
22 Mar 2022
1:08 PM IST
ஆயுதம் ரஷ்யாவிடம் குறைந்ததா ?
 
300 ரஷ்யவீரர்கள் போர் நடத்த மறுத்து திரும்பியதாக உக்ரைன் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. மேலும் ரஷ்ய படையினரிடம் இன்னும் 3 நாட்களுக்கே தேவையான குண்டுகளும், எரிபொருளும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுவரை ரஷ்யாவின் பெரியதாக கருதப்படும் 13 தாக்குதலை முறியடித்துள்ளதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
 
10:55 AM IST
குடியிருப்பு மீது தாக்குதல்
 
குடியிருப்பு மற்றும் மக்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் கவலை தெரிவித்துள்ளது.
 
7:49 AM IST
ரஷ்யா ரசாயண ஆயுதங்களை பயன்படுத்தலாம்; ஜோ பைடன்
 
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரில், ரஷ்யா தோற்கும் நிலை வந்தால், அதிபர் புடின் ரசாயண அல்லது உயிரியல் ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
 
12:12 AM IST
ஆயுதங்களை கைவிட மாட்டோம்; உக்ரைன்
 
ஆயுதங்களை கைவிட்டால், பொதுமக்களும் மற்றும் ராணுவத்தினரும் மரியபோல் நகரத்தை விட்டு பாதுகாப்பாக வெளியேற வழிசெய்து கொடுப்பதாக ரஷ்யா அறிவிப்பு செய்தது. இதனை உக்ரைன் ஏற்க மறுத்து, ஒருபோதும் மரியபோல் நகரத்தை கைவிட மாட்டோம், சரணடையவும் மாட்டோம் என தெரிவித்துள்ளது.
 
21 Mar 2022
5:37 PM IST
அம்மோனியா ஆலைகள் மீது தாக்குதல்
 
ரஷ்யாவின் தாக்குதல் உக்ரைனில் உச்சமடைந்துள்ளதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. சரண் அடைந்தால் விட்ருவோம் என ரஷ்யா எச்சரித்தும் உக்ரைன் பின்வாங்க மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளது. கடந்த 2 நாட்களில் அணு ஆயுதம் மற்றும் அம்மோனியா ஆலைகள் மீது தாக்குதல் நடந்திருப்பதால் பலர் உயிரிழந்து வருகின்றனர்.
 
10:36 AM IST
போலந்துக்கு பைடன் செல்வாரா ?
 
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் நடந்து வரும் வேளையில் ரஷ்ய அண்டை நாடான போலந்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செல்லவிருப்பதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. நேட்டோ நாடானா போலந்துக்கு பைடன் செல்லும் விவரத்தை வெளிப்படையாக வெள்ளை மாளிகை தெரிவிக்கவில்லை.
 
6:21 AM IST
ரஷ்யா செய்வது யுத்தம் அல்ல; பயங்கரவாதம்: ஜெலன்ஸ்கி
கீவ்: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே 26வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில் :உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி வருகிறது.இந்நிலையில் உக்ரைன் அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யா தற்போது செய்து வருவது யுத்தம் அல்ல பயங்கரவாதம் என்று கூறியுள்ளார். மேலும், ரஷ்யா அதிபர் புடினை நேருக்கு நேர் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.
 
20 Mar 2022
8:20 PM IST
ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் தகவல்
உக்ரைனில் ரஷ்யா தாக்குதலில் மார்ச் 19 வரை பொதுமக்கள் 902 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 1459 பேர் காயமடைந்துள்ளதாகவும், ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
 
6:11 PM IST
குழந்தைகள் பலி
ரஷ்யா தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல் காரணமாக 115 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், 140க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
 
3:21 PM IST
உள்நாட்டில் மட்டும் 60 லட்சம் பேர்
 
உக்ரைனில் போர் துவங்கிய நாள் முதல் இதுவரை 30 லட்சத்திற்கும் அதிகமானோர் வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளதாக ஐ.நா., வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்நாட்டில் மட்டும் 60 லட்சம் பேர் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
3:06 PM IST
பள்ளி மீது தாக்குதல் !
 
உக்ரைனில் மரியூபோல் நகரத்தில் மக்கள் தங்க வைக்கப்பட் பள்ளி மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் 400 பேர் காயமுற்றனர்.
 
8:42 AM IST
ராணுவ முகாம் அழிப்பு
 
உக்ரைன் மைகோலைவ் நகரில் உள்ள ராணுவ முகாம் மீது ரஷ்ய படை அதிரடி தாக்குதல் நடத்தியது. ராணுவ வீரர்கள் பலர் இரவு நேரம் என்பதால் உறங்கி கொண்டிருந்ததாக தெரிகிறது. மேலும் பலர் காயமுற்றனர். சேதம் குறித்த தகவல் ஏதும் அதிகாரப்பூர்வமாக இல்லை.
 
19 Mar 2022
8:35 PM IST
அமைதியான தீர்வு தேவை: ஜப்பான் பிரதமர்
உக்ரைன் ரஷ்யா விவகாரத்தில் சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் அமைதியான தீர்வு தேவை: ஜப்பான் பிரதமர்
 
3:29 PM IST
பேச்சு வார்த்தைக்கு வாருங்கள் !
 
ரஷ்யா அமைதி பேச்சு நடத்த கால தாமதமின்றி வர வேண்டும் என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி மீண்டும் இன்று 4 வது முறையாக வலியுறுத்தியுள்ளார். பேச்சுவார்த்தையையே நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் ரஷ்யா பொருட்படுத்தவில்லை. அமைதிக்கு வழி ஏற்படுத்துங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
12:52 PM IST
பைடனுக்கு ரஷ்யா கண்டனம்
ரஷ்யாவில் இருந்து ஜெர்மனி பெறும் எண்ணெய் மூலப்பொருட்கள் இறக்குமதியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அமெரிக்க அதிபர் போர் குற்றம் புரிந்துள்ளார் என கூறியதற்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது.
 
8:04 AM IST
30 குடியிருப்புகளை கைப்பற்றியது உக்ரைன் ராணுவம்
உக்ரைன் ராணுவம் கீவ் அருகே உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை தனது கட்டுப்பாட்டில் மீண்டும் கொண்டுவந்துள்ளது. தலைநகர் கீவ்-ல் இருந்து 70 கிமீ தொலைவுக்கு ரஷ்ய ராணுவத்தை பின்னுக்குத் தள்ளியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கினறன.
 
7:54 AM IST
65 லட்சம் உக்ரைன் மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்வு
 
ஐக்கிய நாடுகள் சபையின் இடம்பெயர்வு அமைப்பின் கூற்றுப்படி 32 லட்சம் உக்ரைன் மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். உள்நாட்டில் 65 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.
 
12:50 AM IST
ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தடையில் நார்வே இணைந்தது
 
ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளை ஐரோப்பிய யூனியன் நாடுகள் விதித்து வருகின்றன. இதில் நார்வே நாடும் இணைந்துள்ளது. நார்வேயில் இருந்து பொருட்கள், சேவைகள், மற்றும் தொழில்நுட்ப ஏற்றுமதி உள்ளிட்டவற்றில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் நார்வே அறிவித்துள்ளது.
 
18 Mar 2022
4:04 PM IST
ரஷ்யா தொடர் தாக்குதல்
6இல் 1 வது புகைப்படம்
Photo Gallery
Photo Gallery
Photo Gallery
Photo Gallery
Photo Gallery
Photo Gallery
Next
3:51 PM IST
அழிப்பு
உக்ரைன் விமானப்படை வெளியிட்ட அறிக்



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies