நைஜீரியாவில் விமானப்படை விமானம் விபத்து: ஏழு பேர் உயிரிழப்பு!
21 Feb,2021
நைஜீரிய விமானப்படை விமானம் அபுஜா விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நைஜீரிய இராணுவத்துக்குச் சொந்தமான சிறிய பயணிகள் விமானமே இன்று (ஞாயிற்றுக்கிழமை) இயந்திரம் செயலிழந்து விபத்துக்குள்ளானதாக நைஜீரியாவின் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கிங் எயார்-350 என்ற விமானமே, அபுஜா விமான நிலைய ஓடுபாதையை நெருங்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், விமான விபத்து இடம்பெற்ற இடத்தில் இராணுவத்தினர் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.