பரிஸ் : கொரோனா வைரசால் பரபரப்பு! - மூடப்பட்ட காவல்நிலையம்!!
25 Feb,2020
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீன சுற்றுலா பயணிகள் மூவர் பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் உள்ள உள்ள காவல்நிலையம் ஒன்றுக்கு வருகை தந்துள்ளனர். திருட்டு சம்பவம் ஒன்றுக்காக அவர்கள் புகார் அளிக்க வந்துள்ளனர். அவர்கள் மூவரில் ஒருவர் திடீரென உடல்நல குறைவால் கிட்டத்தட்ட மயங்கும் நிலைக்கு வந்துள்ளார். உடனடியாக SAMU மருத்துவ சேவைக்கு அழைக்கப்பட்டது.
ஆனால் அதற்குள்ளாக நிலமை பெரும் பரபரப்புக்கு உள்ளானது. குறித்த சீன நபருக்கு கொரோனா தாக்கம் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டதால், உடனடியாக காவல்நிலையம் மூடப்பட்டது. காவல்நிலையத்துக்குள் புதிதாக யாரும் நுழைய அனுமதிக்கவில்லை. அதேவேளை, காவல்நிலையத்துக்குள் இருந்தவர்களும் வெளியேற அனுமதிக்கப்படவில்லை. நிலையம் முற்றாக மூடப்பட்டது.
உடல்நலம் குறைவடைந்த நபருக்கு கொரோனா தாக்கம் இருப்பதாக எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் காரணத்தினை தொடர்ந்து, பிரான்ஸ் மிக துரிதமாக வைரசுக்கு எதிராக தயாராகி வருகின்றது.
இன்று திங்கட்கிழமை பிரான்சின் புதிய சுகாதார அமைச்சர் Olivier Vளூran கொரோனா தாக்கம் தொடர்பான மேலதிக தகவல்களை வெளியிட்டார். அதன்படி பிரான்சில் இதுவரை எந்த புதிய கொரோனா தாக்கமும் கண்டறியப்படவில்லை எனவும், மேலதிகமாக 70 மருத்துவமனைகள் கொரோனா கிருமி தாக்கத்தத்தை எதிர்கொள்ள தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இவை தவிர, பிரான்ஸ் 10 மில்லியன் முக கவசங்களை வாங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். முக கவச தட்டுப்பாடு (பரிசுக்குள்) நிலவுவதால் தற்போது 10 மில்லியன் முக கவசங்கள் ( Mask) வாங்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் Olivier Vளூran குறிப்பிட்டார்.