டாம் தீ விபத்து : ஈயம் உருகி வளிமண்டலத்தில் கலந்தது
06 Jun,2019
நோட்ரே-டாம் தீ விபத்து : ஈயம் உருகி வளிமண்டலத்தில் கலந்தது
பிரான்சின் நோட்ரே-டாம் தேவாலயத்திற்கு அருகில் வசிக்கும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் இரத்த மாதிரிகளை பரிசோதிப்பதற்காக அவர்களை மருத்துவமனைகளுக்கு வருமாறு சுகாதாரத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்ற இந்த அசம்பாவிதத்தின் போது தேவாலயத்தின் கூரைச் சட்டங்களில் இருந்த பெருமளவிலான ஈயம் உருகி காற்றுடன் கலந்துள்ளது. இதன்காரணமாக வளி மாசு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அண்மையில் பரிஸ் மாநகரத்தின் தீவு (டுle de la Citளூ) பகுதியில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குழந்தையொன்றின் இரத்தத்தில் ஈயத்தின் துணுக்குகள் கலந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த குழந்தையின் இரத்தத்தில் ஒழுங்குமுறை வரம்புகளை மீறிய அளவில் ஈயத்தின் துணுக்குகள் கலந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னரே ஏனையவர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய்வதற்காக மருத்துவ பரிசோதனைக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தீ விபத்தின் போது தேவாலயத்தின் கூரை மற்றும் தூபியில் இருந்த சுமார் 300 ரொன் ஈயம் உருகியதாகவும், சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஆபத்தாக அமைந்துள்ளதாகவும் பிரான்ஸ் சுற்றாடல் ஆர்வலர் குழுவான ரொபின் டெஸ் பொய்ஸ் தெரிவித்துள்ளது.