அசாஞ் உளவியல் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்: ஐ.நா நிபுணர்
01 Jun,2019
விக்கிலீக்ஸ் இணைநிறுவனர் ஜூலியன் அசாஞ் நீண்டகாலமாக உளவியல் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதை நிபுணர் நில்ஸ் மெல்ஸர் தெரிவித்துள்ளார்.
அசாஞ்-இன் மனித உரிமைகள் மீறப்படுமென்பதாலும் விசாரணைக்குத் தகுந்த நிலையில் அசாஞ் இல்லையென்பதாலும் அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்தவேண்டாம் என பிரித்தானியாவை மெல்ஸர் வலியுறுத்தியுள்ளார்.
அசாஞ்-இன் விருப்பத்தை முறியடிப்பதற்காக பல ஜனநாயக நாடுகள் ஒருங்கிணைந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் மெல்ஸர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மெல்ஸரின் அவதானிப்புகள் பலவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என நிராகரித்துள்ள பிரித்தானிய அரசாங்கம் பிரித்தானியா எந்தவொரு சித்திரவதைகளிலும் பங்கெடுக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளது