சவுதி அரேபியாவில் 37 பயங்கரவாதிகளுக்கு, தலைகளை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றம்!
26 Apr,2019
சவுதி அரேபியாவில் 37 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!
சவுதி அரேபியாவில் பயங்கரவாத வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 37 பேருக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அந்தவகையில் குறித்த 37 பேருக்கும் தலைகளை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
சவுதி அரேபியா நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு, போதை பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பயங்கரவாத சித்தாந்தத்தை பரப்பியும், பயங்கரவாதிகளாக செயற்பட்டும் வந்த உள்நாட்டினர் 37 பேருக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி இன்று தலைகளை வெட்டி, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.