போர்க்குற்ற வழக்கு: பொஸ்னிய தலைவருக்கு 40 ஆண்டுகால சிறை உறுதியானது
21 Mar,2019
போர்க்குற்ற வழக்கு: பொஸ்னிய தலைவருக்கு 40 ஆண்டுகால சிறை உறுதியானது
போர்க்குற்றம் புரிந்த வழக்கில் பொஸ்னிய அரசியல் தலைவருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ஐக்கிய நாடுகள் சபையின் நீதிபதிகள் உறுதி செய்துள்ளனர். குறித்த வழக்கின் தீர்ப்பு நேற்று (புதன்கிழமை) வழங்கப்பட்டுள்ளது.
செர்பிய இன மக்களின் போராளியாக ரடோவன் கராட்சிக் செயற்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு வந்தார். இந்த வழக்கில் கடந்த 2016ம் ஆண்டு கராட்சிக்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்த நிலையில் அதனை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மீண்டும் உறுதி செய்தனர்.
ரஷ்யா உடைந்த பின் பொஸ்னியாவில் அரசியல் தலைவராகவும், செர்பிய இன மக்களின் போராளியாகவும் ரடோவன் செயற்பட்ட 1995ம் ஆண்டு காலப்பகுயில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு ஐக்கிய நாடுகளின் நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் தலை மறைவாகியிருந்த கராட்சிக் 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.