நிலநடுக்கத்தால் நெருக்கமான தீவுகள்
25 Nov,2018
நியூஸிலாந்தில் இரு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, அந்த நாட்டின் இரு முக்கியத் தீவுகள் இடையிலான இடைவெளி குறைந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அந்த நாட்டு புவியியல் ஆய்வு அமைப்பின் விஞ்ஞானிகள் கூறியதாவது:
கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 24-ஆம் தேதி ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கத்தால், நியூஸிலாந்தின் வடக்கு மற்றும் தெற்குத் தீவுகள் இடையிலான இடைவெளி 35 செ.மீ. அளவுக்குக் குறைந்துள்ளது.
மேலும், நிலநடுக்கம் காரணமாக தெற்குத் தீவின் நெல்ஸன் நகர தரைமட்டம் 20 மி.மீ. அளவுக்கு கீழிறங்கியுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.