யெமன் நாட்டில் இடம்பெற்றுவரும் போரின் அகோரம் – பஞ்சத்தில் மக்கள்
16 Oct,2018
யெமன் நாட்டில் தொடர்ந்துவரும் யுத்தத்தின் காரணமாக 100 ஆண்டுகளில் மிகமோசமான பஞ்சத்தின் விளிம்பில் அந்நாடு இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் 13 மில்லியன் பேர் பட்டினியின் விளிம்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட உள்நாட்டுப்போரில் சவுதி அரேபியாவின் வான்தாக்குதல்களின் பங்களிப்பின் விளைவாக நிலைமை மோசமடைந்துள்ளது.
உலகில் பஞ்சம் நிலவாது எனும் நம்பிக்கையில் 21 ஆம் நூற்றாண்டில் காலடி எடுத்துவைத்தோம், ஆனால் எத்தியோப்பியாவிலும் வங்காளத்திலும் சோவியத் ஒன்றியத்திலும் நாம் கண்ட பஞ்சம் உலகை உலுக்கியது.
தற்போது மீண்டும் யெமனில் அதேயளவு கோரமான பஞ்சத்தை நாம் காணப்போகிறோமென ஐக்கிய நாடுகள் சபையைச் சேர்ந்த லிஸ் கிராண்டே பிபிசிக்கு அளித்த பேட்டியில்கூறியுள்ளார்.
மேலும் 12 முதல் 13 மில்லியன் அப்பாவி குடிமக்கள் உணவில்லாமல் உயிரிழக்கும் ஆபத்தை எதிர்கொள்ளக்கூடும் என நாங்கள் கணித்துள்ளோம்.
இந்நிலை குறித்து உலகம் வெட்கப்படவேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை எனவும் துன்பம் நிறைந்த மக்களுக்கு உதவ முடிந்த அனைத்தையும் செய்ய நமது உறுதிப்பாட்டை புதுப்பிக்கவும், மோதலை முடிவுக்கு கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
சவுதி தலைமையிலான கூட்டணியால் 2015 ஆம் ஆண்டிலிருந்து கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற இப்போரில் 10000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தப்போர் ஐக்கிய நாடுகள் சபையால் உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடி என்று கூறப்பட்டுள்ளது.