5ஜி தொழில்நுட்பத்தில் ஹுவாவேவுடன் போட்டிக்கு தயாராகிறதா ஜியோ?

18 Jul,2020
 

 
 
வெறும் 12 வாரங்களில் உலகின் முன்னணி நிறுவனங்களான ஃபேஸ்புக், கூகுள், இன்டெல், குவால்காம் என மொத்தம் 14 நிறுவனங்கள் போட்டிப் போட்டு கொண்டு ரிலையன்ஸின் துணை நிறுவனமான ஜியோவில் முதலீடு செய்துள்ளது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
 
அதாவது, 84 நாட்களில் ஜியோவின் 32.82 சதவீத பங்குகளை 14 நிறுவனங்களுக்கு விற்றதன் மூலம், 1.51 லட்சம் கோடி ரூபாய் திரட்டியுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.
 
2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜியோ நிறுவனம் பல்வேறு தரப்பினரையும் அதிசயிக்க வைப்பது இது முதல் முறையல்ல. இந்த நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜியோ பிளாட்பார்ம்சின் அதிவேக வளர்ச்சிக்கான காரணம், 5ஜி உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களில் கால்பதிப்பதன் மூலம் பிராந்திய, சர்வதேச அளவில் தொலைத்தொடர்புத் துறையில் அது ஏற்படுத்தப்போகும் தாக்கம், ஜியோவின் வளர்ச்சி மற்ற நிறுவனங்களுக்கு அளிக்கும் அழுத்தம் உள்ளிட்ட விடயங்களை அலசுகிறது இந்த கட்டுரை.
 
 
2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் முன்னெப்போதுமில்லாத வகையில் பல்வேறு சலுகைகளுடன் தனது வணிகரீதியிலான பயணத்தை ஆரம்பித்தது ஜியோ.
 
இணைய பயன்பாட்டுக்கு மட்டும் குறைந்த கட்டணம், குரல்வழி அலைபேசி அழைப்பு முற்றிலும் இலவசம் என்ற வசீகர திட்டத்தின் மூலம் கால்பதித்த ஜியோ, அடுத்த சில ஆண்டுகளிலேயே வருவாய் அடிப்படையிலும், சந்தாதாரர்களின் எண்ணிக்கை அடிப்படையிலும் இந்தியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக விளங்குகிறது.
 
டிராய் அமைப்பின் சமீபத்திய தரவின்படி, 38 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களுடன் ஏறுமுகத்தில் சென்றுக்கொண்டிருக்கும் ஜியோவின் அடிப்படை கட்டமைப்பே சற்று வித்தியாசமானது என்கிறார் நிதி ஆலோசகரும், நிதிசார் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான கார்த்திகேயன்.
 
"ஜியோ ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனமாகவே தொடங்கப்பட்டது. ஆனால், அது வழக்கமான முறையில் நிதியை திரட்டாமல் தொடக்கத்தில் முதலீடு செய்த சுமார் பத்தாயிரம் கோடியில் பெரும் பங்கை வங்கிகளிருந்து கடனாக பெற்றது. நாட்டின் கடைக்கோடியிலுள்ள பகுதிவரை தொலைத்தொடர்பு சேவை வழங்குவதை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட ஜியோவின் வியக்கத்தக்க வளர்ச்சியால் அது இப்போது தனது தாய் நிறுவனமான ரிலையன்ஸுக்கு உதவும் நிலையை எட்டியுள்ளது" என்று கூறுகிறார் கார்த்திகேயன்.
 
அமெரிக்கா - சீனா - பிரிட்டன்: பூகோள அரசியலில் சிக்கிக்கொண்ட ஹுவாவே நிறுவனம்
கோவிட் 19: சீனாவுக்கு ஏற்படும் அழுத்தம் இந்தியாவுக்கான தொழில் வாய்ப்பாக மாறுமா?
முதலீடுகளை ஈர்ப்பதற்கான அவசியமென்ன?
இலவச குரல்வழி அழைப்பு, குறைந்த விலை திறன்பேசிகள், கண்ணாடி இழை தொழில்நுட்பத்தை கொண்டு செயல்படும் அதிவேக இணைய சேவை, தொலைக்காட்சி மற்றும் காணொளி காட்சி சேவை உள்ளிட்ட சேவைகளை வழங்கி வரும் ஜியோ, கொரோனா வைரஸ் பரவலால் அதிகரித்துள்ள இணைய வழி கூட்டத்திற்கென தனி செயலி, வீட்டிலிருந்தே பாடம் கற்பதை எளிமைக்கும் ஜியோ கிளாஸ் உள்ளிட்ட காலத்திற்கேற்ற தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துகிறது.
 
இந்த நிலையில், பெரும் எண்ணிக்கையான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள ஜியோ தற்போது குறுகிய காலத்தில் இத்தனை முதலீடுகளை கவர்வதற்காக அவசியம் என்னவென்று கார்த்திகேயனிடம் கேட்டபோது, "பெரும் அளவிலான கடன்களை வங்கிகளின் வாயிலாக பெற்றே ஜியோ நிறுவனம் தொடங்கப்பட்டது. அந்த வகையில், ஜியோ உள்ளிட்ட ரிலையன்ஸின் பல்வேறு நிறுவனங்களுக்காக பெறப்பட்ட கடன்களின் அளவு வட்டியுடன் சேர்த்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக ரிலையன்ஸின் வருவாவில் முக்கிய பங்கு வகிக்கும் எண்ணெய் தொழிலும் மோசமான இழப்பை சந்திக்க, திட்டமிட்டதை விட அதிக முதலீட்டை ஈர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ரிலையன்ஸ் தள்ளப்பட்டது" என்கிறார் அவர்.
 
 
 
ஜியோவில் குவிந்துள்ள முதலீடுகளை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். அதாவது, கடன் சுமைகளிலிருந்து மீள்வதற்கு பயன்படும் நிதி மற்றும் புதிய தொழில்நுட்பங்களில் கால்பதிக்க உதவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வகையிலான முதலீடு.
 
இந்த முதலீடுகளிலிருந்து கிடைத்துள்ள பணத்தின் மூலம் கடனில்லா நிறுவனமாக உருவெடுத்துள்ள ரிலையன்ஸ் தனது வருங்கால திட்டங்களை இன்னும் அதிக நம்பிக்கையுடனும், துணிவுடனும் மேற்கொள்ள முடியும் என்று கூறுகிறார் கார்த்திகேயன்.
 
அதே வேளையில், கூகுளுடன் சேர்ந்து ஜியோ உருவாக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஆண்ட்ராய்டை அடிப்படையாக கொண்ட இயங்குதளம் உள்ளிட்டவை இரண்டாம் வகை முதலீட்டில் வருகிறது.
 
5ஜி தொழில்நுட்பத்தில் ஜியோ ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன?
கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் அந்த நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வெளியிட்ட ஜியோவின் 5ஜி தொழில்நுட்பம் தொடர்பான அறிவிப்பு தொலைத்தொடர்புத் துறையில் பெரிதும் கவனம் பெற்றுள்ளது.
 
"ஜியோ 5ஜி தொழில்நுட்பத்துக்கான முழு கட்டமைப்பையும் முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளது. 5ஜிக்கான அலைவரிசை ஒதுக்கப்பட்ட உடனேயே இது பரிசோதனைக்கு தயாராக இருக்கும். மேலும், இதை அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியும்" என்ற முகேஷ் அம்பானியின் அறிவிப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.
 
 
இதுமட்டுமின்றி, இந்திய அளவில் ஜியோவின் 5ஜி தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்ததும் அதை உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருப்பதாக முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.
 
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய இந்தியப் பிரதமரின் கீழ் செயல்படும் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் (National Security Advisory Board) உறுப்பினரும் சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தின் பேராசிரியருமான காமகோடி, "இந்திய தொலைத்தொடர்புத்துறையில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தப்போகும் அறிவிப்பை ஜியோ வெளியிட்டுள்ளதை வரவேற்கிறேன். மற்ற தலைமுறைகளுக்கான தொழில்நுட்பத்தை விட மிகுந்த வித்தியாசம் மிக்க 5ஜி தொழில்நுட்பத்தை இந்தியாவை சேர்ந்த நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரிப்பது என்பது மிகவும் முக்கியமான விடயம்" என்று கூறினார்.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies