மின்னல் ரயில் சீனா புது திட்டம்
30 Sep,2017
உலகிலேயே அதிவேகத்தில் மணிக்கு ( 4,020 கி.மீ., )செல்லும் பறக்கும் ரயிலை தயாரிக்க சீனா திட்டமிட்டுள்ளது.
உலகில் புல்லட் ரயில் அதிவேக ரயில் ,சொகுசு ரயில் என புதிய தொழில்நுட்பங்களை உலகிற்கு அறிமுகப்படுத்துவதில் சீனா மற்றும் ஜப்பான் இடையே போட்டி நிலவுகிறது,. சீனா தான் தற்போது ரயில்வே துறையில் முன்னணியில் உள்ளது. சமீபத்தில் சீனாவில் இருந்து பிரிட்டனுக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டது. உலகில் அதிவேக ரயில் பாதைகள் அதிக தூரத்துக்கு உள்ள நாடு சீனா. இங்கு 22 ஆயிரம் கி.மீ.,தூரத்துக்கு அதிவேக ரயில் பாதை உள்ளது. வரும் 2020க்குள் மேலும் 10,000 தூர அதிவேக ரயில் பாதை உருவாக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளது.
பறக்கும் ரயில்
ரயில்வே துறையினல்பல சாதனைகளை சாதனைகளை கொண்டிருக்கும் சீனா, அடுத்ததாக சூப்பர்சானிக் பறக்கும் ரயிலை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவி்துள்ளது. இதற்கான காலம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
சிறப்பம்சங்கள்
இந்த பறக்கும் ரயில் மணிக்கு 4,020 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் பெற்றது.இது பயணிகள் விமானங்களின் வேகத்தை விட 4 மடங்கு அதிகம். பயணிகள் விமானம் சராசரியாக மணிக்கு 900 கி.மீ., வேகத்தி்ல செல்லும். விமானத்தில் சென்னையில் இருந்து டில்லிக்கு செல்ல 2மணி 45 நிமிடங்கள் ஆகிறது. அதுவே இந்த ரயில் எனில் அரை மணி நேரத்தில் சென்று விடலாம்.
மேலும் சீனாவில் செயல்பாட்டில் உள்ள உலகின் அதிவேக புல்லட் ரயிலை(மணிக்கு 350 கி.மீ.,) விட, இது 10 மடங்கு வேகம் கொண்டது. மேலும், அமெரிக்காவின் எலன்மஸ்க் கண்டுபிடித்த ஹை ப் லூப் ரயில் ( மணிக்கு 1,200 கி.மீ.,) தொழில் நுட்பத்தை விட மூன்று மடங்கு வேகத்தில் செல்லும் திறன் பெற்றது.
எப்படி செயல்படுகிறது
இந்த ரயில் நம் நாட்டு ரயிலை போலஇருப்பு பாதையில் செல்வதில்லை. சக்கரமும் கிடையாது. ஒரு வெற்றிடமாக்கப்பட்ட டியூப் வடிவ அமைப்பை ஒரு இடத்திற்கும் இன்னொரு இடத்திற்கும் இடையே ஏற்படுத்தி அதன் வழியே செல்லும் வகையில் இது செயல்படும். எந்த தடையும் அதன் வேகத்தை குறைத்து விடக்கூடாது என்பதற்காக டியூப்பிற்குள் குறைந்த காற்றழுத்தம் பராமரிக்கப்படும்.
இந்தியாவின் அதிவேக ரயில் காதிமான் எக்ஸ்பிரஸ். இது டில்லி-ஆக்ரா இடையே பயணிக்கிறது. இதன் வேகம் மணிக்கு 160 கி.மீ.,