சாம்சுங் நிறுவன பில்லியனருக்கு 5 ஆண்டுகள் சிறை
01 Sep,2017
..................................
<img data-cke-saved-src="\" src="\"uploads/untitled" w3554r5555.pngjjyy77.png\"="">
சாம்சுங் நிறுவனத்தின் தலைவர் வரிசையில் இருக்கும் லீ ஜீ யோங்கிங் ஊழல் செய்த குற்றத்திற்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சாம்சுங் நிறுவன வாரிசான லீ ஜீ யோங்கிங் அடுத்த தலைவர் பதவிக்கு தயாராகவுள்ளார். இந்நிலையில், இவர் சாம்சுங் நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்படுவதற்காக அரசு நடைமுறைகளை மாற்றி மோசடி செய்ததோடு மட்டுமல்லாமல் லஞ்சம் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த குற்றத்திற்கான தீர்ப்பினை இன்று தென் கொரியா நீதிமன்றம் வழங்கியுள்ளது.
அதில், இவருக்கு 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து லீயின் வழக்கறிஞர் கூறியதாவது, லீ குற்றமற்றவர், இந்த வழக்கை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என கூறியுள்ளார். லீ ஜீ யோங்கிங் பில்லியன் சொத்துக்களுக்கு சொந்தக்காரர் ஆவார்.