வாள்வெட்டு வெறியாட்டம் - பெண்கள் உட்பட ஐவர் வைத்தியசாலையில்
29 May,2019
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் நேற்றையதினம்(27) இரவு வாள்வெட்டு ரவுடிக்கும்பலொன்று வீடு புகுந்து தாக்கியதில் பெண்கள் உட்பட ஐவர் காயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் சிகிச்சைக ளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மாங்குளம் புதியகொலனியைச் சேர்ந்த சிவராசா என்பவரின் வீட்டுக்குள் வாள், கைக்கத்தி, கம்பி, பொல்லு முதலிய ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த கும்பல் அங்கிருந்தவர்களை சரமாரியாகத் தாக்கியதுடன் அங்கிருந்த பெறுமதியான பொருட்களையும் அடித்து சேதமாக்கியுள்ளது.
இவர்களது தாக்குதலுக்குள்ளான பெண்கள் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் வீட்டிலிருந்த சில பெறுமதியான உடமைகளையும் ரவுடிக்கும்பல் திருடிக்கொண்டு சென்றுள்ளதாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.