போலி கடவுச்சீட்டுடன் சிக்கிய இரு இலங்கைத் தமிழர்களுக்கு சிங்கப்பூரில் சிறைத்தண்டனை!
09 Jul,2018
போலி கடவுச்சீட்டு வைத்திருந்த இரு இலங்கைத் தமிழர்களுக்கு சிங்கப்பூரில் எட்டு மாதகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போலியான பிரித்தானிய கடவுச்சீட்டுகளை வைத்திருந்ததார்கள் என்று இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக, சிங்கப்பூர் குடிவரவு சோதனை பணியகம் தெரிவித்துள்ளது.
நாகமணி கங்காதரன் (46) மற்றும் கந்தசாமி நித்யானந்தன் (27) ஆகிய இருவரும் சிங்கப்பூர் விமான நிலைய குடிவரவு சோதனை பணியக அதிகாரிகளால் கடந்த மாதம் 3ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கு போலி கடவுச்சீட்டுகளை விநியோகித்த மலேசிய பிரஜையான இசான் இஸ்மயி பின் ஐசாக் என்ற நபரும் கைது செய்யப்பட்டு, எட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தொழில் பெற்றுக்கொள்ளும் நோக்கில் குறித்த இலங்கைப் பிரஜைகள் இருவரும் சிங்கப்பூர் ஊடாக பிரித்தானியா செல்வதற்கான ஏற்பாடுகளை இலங்கையைச் சேர்ந்த ஒருவர் செய்திருந்தமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.