புலிகள் காலத்தில் முன்வைத்த அரசியல் முன்மொழிவுகளிலிருந்து பின்வாங்குகிறது அரசு-

24 Jun,2018
 

 
 
 
தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்பு செயற்­பட்ட காலத்­தில் அர­சி­யல் தீர்வு சம்­பந்­த­மாக இலங்கை அரசு பல்­வேறு முன்­மொ­ழி­வு­களை முன்­வைத்­தி­ருந் தது. ஆனால் இன்று அரசு அதி­லி­ருந்து பின்­வாங்­கு­கின்­றது. இத­னைப் சர்வதேச சமூ­கம் கவ­னத்­தில் எடுக்­க­வேண்­டும். இவ்­வாறு எதிர்­க்கட்­சித் தலை­வ­ரும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.
வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்வ­ர­னின் உரை­கள் அடங்­கிய நூல் வெளி­யீட்டு விழா வீர­சிங்­கம் மண்­ட­பத்­தில் நேற்று இடம்­பெற்­றது. இந்த நிகழ்­வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,
சாதா­ர­ண­மாக ஒரு நாடு சுதந்­தி­ரம் அடை­வ­தற்கு முன்­பாக அந்த நாட்­டில் வாழ்­கின்ற வேறு­பட்ட மக்­கள் மத்­தி­யி­லுள்ள அனைத்­துப் பிரச்­ச­னை­க­ளுக்­கும் தீர்வு காணப்­பட்டு அந்­தத் தீர்­வு­கள் ஒரு அர­சி­யல் சாச­னத்­தில் உள்­ள­டக்­கப்­ப­டும். நாடு சுதந்­தி­ரம் அடை­வ­தற்கு முன்­ப­தாக அது நடை­பெ­றும். ஆனால் துர­திஸ்­ட­வ­ச­மாக இலங்­கை­யைப் பொறுத்­த­வ­ரை­யில் அவ்­வி­த­மான ஒரு விட­ய­மும் நடை­பெ­ற­வில்லை.
அவ்­வாறு நடை­பெற்­றி­ருந்­தால் 1948ஆம் ஆண்டு நாடு சுதந்­தி­ரம் அடைந்த பொழுது தமி­ழர்­க­ளு­டைய தேசிய இனப்­பி­ரச்­ச­னைக்கு ஒரு தீர்வு காணப்­பட்­டி­ருக்­கும். டொன­மூர் ஆணை­யா­ளர் முன்­பா­கக் கருத்­துக்­க­ளைக் கூறிய கண்­டிய தலை­வர்­கள் இந்த நாட்­டில் கூட்­டாட்சி அமைப்பு முறை ஏற்­பட வேண்­டு­மென்று கூறி­யி­ருந்­தார்­கள். ஆனால் அதனை நாங்­கள் ஆத­ரிக்­க­வில்லை. எங்­க­ளுக்­குப் பூரண சுயாட்சி வேண்­டு­மென்று இளை­ஞர் கழ­கம் கேட்­டார்­கள்.
இதன் பின் சோல்­பரி ஆணைக்­குழு வந்­தது. அந்த நேரத்­தில் நாங்­கள் ஐம்­ப­திற்கு ஐம்­பது கேட்­டோம். அதா­வது ஐம்­பது வீதம் பெரும்­பான்­மை­யி­ன­ருக்­கும் ஐம்­பது வீதம் சிறு­பான்­மை­யி­ன­ருக்­கும் என்று கேட்­டோம். எமது உள்­ளக சுய­நிர்­ணய உரி­மை­யின் அடிப்­ப­டை­யில் எமது இறை­யாண்­மை­யின் அடிப்­ப­டை­யில் எமக்­குப் பிராந்­திய சுயாட்சி கிடைக்க வேண்­டு­மென்று நாங்­கள் கேட்­க­வில்லை. பிராந்­திய சுயாட்­சியை கேட்­டி­ருந்­தால் இந்­தப் பிரச்­ச­னையை அப்­போதே தீர்த்து இருக்­க­லாம்.
அத­னால் அந்­தப் பிரச்­ச­னை­கள் தீராது தொடர்­கின்­றது. இந்­தி­யக் குடி­யு­ரிமை பறிக்­கப்­பட்­டது. நூற்­றுக் கணக்­கான மக்­கள் தங்­க­ளது சொந்த ஊர்­களை இழந்­தார்­கள். பெரும்­பான்­மை­யின மக்­கள் தமிழ் பேசும் மக்­க­ளின் இடங்­க­ளில் குடி­யேற்­றப்­பட்­டார்­கள். இந்­தக் குடி­யேற்­றங்­க­ளால் கிழக்கு மாகா­ணத்­தின் தோற்­றம் மாற்­ற­ம­டைந்­தது. அதே போல இன்­றைக்கு வட­மா­கா­ணத்­தி­லும் நடை­பெ­று­கின்ற சூழலை நாங்­கள் பார்க்­கின்­றோம். அது நிறுத்­தப்­பட வேண்­டி­ய­தொரு செயற்­பா­டா­கும்.
நாடு சுதந்­தி­ரம் அடை­வ­தற்கு முன்­ப­தாக நாங்­கள் பிராந்­திய சுயாட்­சி­யு­டன் பெரும்­பான்­மை­யாக வாழ்ந்து வந்த பிர­தே­சங்­க­ளில் கணி­ச­மான அதி­கா­ரப் பகிர்­வின் மூலம் அதி­கா­ரங்­க­ளைப் பெற்­றி­ருந்­தால் இவை எல்­லா­வற்­றை­யும் தவிர்த்­தி­ருக்­க­லாம். அது இப்­போது முடிந்த கதை. ஆனா­லும் அதைப் பற்­றிக் கதைக்­க­லாம். ஆனால் அதைப்­பற்­றிக் கதைப்­ப­தால் எந்­த­வி­த­மான பிர­யோ­ச­ன­மும் வரப் போவ­தில்லை.
இன்­றைக்கு நாடு முழு­வ­தும் மாகாண சபை­கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. எல்லா மாகா­ணங்­க­ளும் கூடிய அதி­கா­ரத்­தைக் கேட்­டி­ருக்­கி­றார்­கள். காணி, சட்­டம் ஒழுங்கு அதி­கா­ரம் தங்­க­ளுக்கு தரப்­பட வேண்­டு­மென்று கோரி­யி­ருக்­கின்­றார்­கள். மத்­தி­யி­னு­டைய தலை­யீ­டு­கள் இருக்­கக் கூடா­தென்­றும் கேட்­டி­ருக்­கின்­றார்­கள். ஆளு­ந­ரு­டைய அதி­கா­ரங்­கள் கட்­டுப்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மென்று கேட்­டி­ருக்­கின்­றார்­கள். தென் மாகாண முத­ல­மைச்­சர், ஆளு­நர் பத­வியே வேண்­டா­மென்­றும் ஆளு­நர் பதவி நீக்­கப்­பட வேண்­டு­மென்­றும் கூறி­யி­ருக்­கின்­றார்.
நாங்­கள் எவ­ரை­யும் பகைக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை. எல்­லோ­ரு­ட­னும் நாங்­கள் நட்­பு­ற­வைப் பேண வேண்­டும். எங்­கள் நியா­யத்தை விளக்க வேண்­டும். நீதியை விளக்க வேண்­டும். ஏனைய நாடு­க­ளில் பல்­வேறு இனங்­கள் பல்­வேறு மதங்­க­ளைச் சார்ந்த பல்­வேறு கலா­சா­ரங்­க­ளைச் சார்ந்த மக்­கள் வாழ்­கின்ற பிர­தே­சங்­க­ளில் எவ்­வி­த­மான ஆட்சி முறை­கள் பின்­பற்­றப்­ப­டு­கின்ற என்­பதை நாங்­கள் விளக்க வேண்­டும். அதனை தென்­னி­லங்கை மக்­கள் அறிய வேண்­டும். இன்­றைக்கு தென்­னி­லங்கை மக்­க­ளும் அதனை அறிந்து கொண்டு வரு­கின்­றார்­கள்.
புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சி­கள் நடை­பெற்று வரு­கி­றது. அதனை நாங்­கள் முன்­னெ­டுத்து ஒரு நிரந்­த­ர­மான அர­சி­யல் தீர்வை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு வழி இருக்­கு­மாக இருந்­தால் அந்­தச் சந்­தர்ப்­பத்தை இழக்­கக் கூடாது. அந்­தச் சந்­தர்ப்­பத்தை நாங்­கள் முழு­மை­யா­கப் பயன்­ப­டுத்த வேண்­டும். அந்­தக் கரு­மத்­தில் நாங்­கள் முழு­மை­யாக ஈடு­பட வேண்­டும். எங்­கள் பங்­க­ளிப்­பை­யும் முழு­மை­யாக செலுத்தி அதில் நாங்­கள் ஈடு­பட வேண்­டும்.
அடிப்­ப­டையான விட­யங்­களை நாங்­கள் விட்­டுக் கொடுக்க முடி­யாது. அவ்­வாறு விட்­டுக் கொடுக்க முடி­யாத விட­யங்­க­ளும் இருக்­கின்­றன. ஆனால் நாங்­கள் ஈடு­பட்டு அந்­தக் கரு­மத்தை முன்­னெ­டுத்து எமது மக்­க­ளுக்கு போதிய பாது­காப்பை அவர்­க­ளது உரி­மையை உரித்தை அங்­கீ­க­ரித்­துக் காணக்­கூ­டி­ய­தொரு வழி இருக்­கு­மாக இருந்­தால் அந்­தச் சந்­தர்ப்­பத்தை நாங்­கள் இழக்­கக் கூடாது. அதனை நாங்­கள் தெளி­வா­கப் புரிந்து கொள்ள வேண்­டும்.
இலங்­கை­யில் இனப்­பி­ரச்­ச­னைக்­குத் தீர்­வைக் காணு­வ­தில் சர்வதேச சமூ­கத்­துக்கு தார்­மீ­கக் கடமை உள்­ளது. 1983 ஆம் ஆண்டு அம்­மை­யார் இந்­திரா காந்­தி­யின் தலை­யீடு கார­ண­மா­கத் தான் செயற்­பா­டு­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. ஆயி­னும் அவர் கொலை செய்­யப்­பட்­டார். அவ­ரைத் தொடர்ந்து அவ­ரது மகன் ராஜிவ்­காந்தி இந்­தி­யா­வின் பிரதமரானார்.
அவ­ரெ­டுத்த முயற்­சி­யின் கார­ண­மா­கத் தான் 13ஆவது அர­ச­மைப்­புத் திருத்­தம் முன்­னெ­டுக்­கப்­பட்டு மாவட்­டச் சபை­க­ளைப் பெற முடி­யா­மல் இருந்த எமக்கு மாகாண சபை­கள் வழங்­கப்­பட்­டன. வட­கி­ழக்கு இணைக்­கப்­பட்டு ஒரு மாகாண சபை­யாக பல்­வேறு அதி­கா­ரங்­கள் வழங்­கப்­பட்டு ஒரு முத­ல­மைச்­சர் அமைச்­சர் சபை உரு­வாக்­கப்­பட்டு ஆளு­நர் உரு­வாக்­கப்­பட்­டது. அத­னூ­டாக பல­த­ரப்­பட்ட கரு­மங்­கள் நடை­பெற்­றன.
13ஆவது திருத்­தத்தை நாங்­கள் ஒரு தீர்­வாக ஏற்­றுக் கொள்­ள­வில்லை. அண்­ணண் அமிர்­த­லிங்­கம், சிவ­சி­த­ரம்­ப­ரம், நான் உள்­பட மூவ­ரும் கையொப்­ப­மிட்டு ராஜிவ் காந்­திக்கு கடி­த­மொன்றை அனுப்­பி­யி­ருந்­தோம். அந்­தக் கடி­தத்­தில் 13 ஆவது திருத்­தம் ஒரு தீர்­வாக அமை­ய­வில்லை என்­பதை தெளி­வா­கக் குறிப்­பிட்­டி­ருந்­தோம். ஒரு நிரந்­த­ர­மான தீர்வை பெற்­றுக் கொள்­வ­தற்கு தொடர்ந்­தும் நாங்­கள் பய­ணிப்­ப­தா­க­வும் குறிப்­பிட்­டி­ருந்­தோம்.
தமி­ழீழ விடு­த­லைப் புலி­களை அழிப்­ப­தற்­காக சர்வதேச சமூ­கம் இலங்கை அர­சுக்கு முழு­மை­யான ஆத­ரவை வழங்­கி­யது. இதை எல்­லோ­ரும் ஏற்­றுக் கொள்ள வேண்­டும். இந்த அடிப்­ப­டை­யில் நாங்­கள் ஒரு நியா­ய­மான தீர்வை ஏற்­ப­டுத்­து­வோம் என்று இலங்கை அரசு சர்வதேச சமூ­கத்­துக்கு வாக்­கு­று­தி­யைக் கொடுத்­தது.
அது மாத்­தி­ர­மல்ல தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் செயற்­பட்ட காலத்­தில் அர­சி­யல் தீர்வு சம்­மந்­த­மாக இலங்கை அரசு பல்­வேறு முன்­மொ­ழி­வு­களை முன்­வைத்­தி­ருந்­தது. ஆனால் இன்­றைக்கு அவர்­கள் அதி­லி­ருந்து பின்­வாங்­கு­கின்­றார்­கள். இதைப் சர்வதேச சமூ­கம் புரிந்து கொள்ள வேண்­டும்.
இலங்­கை­யில் வாழ்­கின்ற தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னைக்கு ஒரு நியா­ய­மான நிரந்­த­ர­மான அர­சி­யல் தீர்­வைக் காண்­ப­தற்­கு­ரிய பங்­க­ளிப்­பைச் செய்­வ­தற்கு தமக்­கொரு தார்­மீ­கக் கடமை இருக்­கி­ற­தென்­பதை சர்வதேச சமூ­கம் புரிந்து கொள்ள வேண்­டும். இதில் அவர்­கள் தவற முடி­யாது. அவ்­வாறு இதில் அவர்­கள் தவ­றி­னால் அவர்­க­ளு­டைய செயற்­பாடு சர்வதேச ரீதி­யாக அர்த்­த­மற்­ற­தா­கிப் போய்­வி­டும் – என்­றார்.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies