மட்டக்களப்பில் 19 வயது யுவதிகள் இருவர் சடலங்களாக மீட்பு!
27 May,2018
மட்டக்களப்பு - ஏறாவூர் மற்றும் கரடியனாறு ஆகிய பிரதேசங்களில், யுவதிகள் இருவரின் சடலங்களை நேற்று மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர் - குமாரவேலியார் கிராமத்தைச் சேர்ந்த கஜேந்திரன் நிஸாந்தினி (வயது 19) என்பவரின் சடலம் அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை கரடியனாறு -கனித்தீவு கிராமத்தைச் சேர்ந்த சௌந்தரராஜன் வினோதினி (வயது 19) என்பவரின் சடலமும் அவரது மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விரு சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பட்டதா என்ற விரிவான விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தனர்