முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பற்றி இப்படிச் சொல்கிறார் சம்பந்தன்!
19 May,2018
விடுதலைக் கனவுடன் ஆயிரமாயிரம் வேங்கைகளும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களும் தங்களின் உயிர்களை முள்ளி வாய்க்கால் மண்ணில் ஆகுதியாக்கியுள்ளார்கள். அவர்களின் கனவு என்றோ ஒரு நாள் நனவாகும் என்பதை முள்ளிவாய்க்கால் மண்ணில் நடைபெற்ற ‘நினைவேந்தல்’ நிகழ்வில் பெருந்திரளான தமிழர்கள் ஓரணியில் உணர்வெழுச்சியுடன் பங்கேற்றமை எடுத்துக் காட்டுகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், இரா.சம்பந்தன் தெரிவித்தார்.முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்றுமுன்தினம் கொடுந்துயர் நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழர்களால் உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.