இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஆள் கடத்தல் - பத்திரிகையாளர் கைது
30 Mar,2018
காமன்வெல்த் போட்டிக்காக அழைத்துச் செல்வதாக கூறி ஆட்களை கடத்திய இந்திய பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஆள் கடத்தல் - பத்திரிகையாளர் கைது
சிட்னி:
ஆஸ்திரேலியா நாட்டின் கோல்ட் கோஸ்ட் பகுதியில் அடுத்த மாதம் 4-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்காக பல்வேறு நாட்டினரும் ஆஸ்திரேலியா வரத்தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில், பிரிஸ்பேன் விமான நிலையத்தில் இன்று வந்திறங்கிய கும்பலை எல்லைப் படை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த ஆவணங்களை சரிபார்த்தபோது, அவை போலியானவை என தெரிந்தது. விசாரணையில், அவர்களை காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை காண்பதற்காக அழைத்து வந்துள்ளதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, அவர்களை அழைத்து வந்த இந்திய பத்திரிகையாளர் ராகேஷ் சர்மாவின் ஆவணங்களை சரிபார்த்தனர். அவையும் போலியாக தயாரிக்கப்பட்டது என தெரிந்ததால் அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்