அளம்பில் துயிலுமில்லக் காணியை இராணுவத்துக்கு வழங்கக் கூடாது! - பொதுமக்கள் மகஜர்
26 Mar,2018
அளம்பில் மாவீரர் துயிலுமில்ல காணியை இராணுவத்துக்கு வழங்கக் கூடாது என்று, அதனை மீட்டு இம்முறை மாவீரர் நாளுக்கு விளக்கேற்ற ஏற்பாடு செய்து தருமாறும் கோரி 600 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கையெழுத்திட்டு முல்லைத்தீவு மாவட்ட செயலரிடம் மகஜர் ஒன்றை இன்று கையளித்தனர்.
அளம்பில் மாவீரர் துயிலுமில்ல காணியை இராணுவத்துக்கு வழங்கக் கூடாது என்று, அதனை மீட்டு இம்முறை மாவீரர் நாளுக்கு விளக்கேற்ற ஏற்பாடு செய்து தருமாறும் கோரி 600 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கையெழுத்திட்டு முல்லைத்தீவு மாவட்ட செயலரிடம் மகஜர் ஒன்றை இன்று கையளித்தனர்.
முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலுமில்ல காணியை இராணுவத்தினருக்கு சுவீகரிப்பதற்காக கிராம அலுவலர் ஊடாக அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த காணியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திகளை நிறுத்துமாறு கோரியும், எமது உறவுகளுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்த குறித்த காணியை மீட்டுத்தர வேண்டும் எனவும் 600 க்கும் மேற்பட்ட மக்கள் கையொப்பமிட்டு மாவட்டச் செயலருக்கு மகஜரைக் கையளித்தனர். இதுதொடர்பில் உரியவர்களுக்கு தெரியப்படுத்துவதாக இதன்போது மாவட்டச் செயலர் தெரிவித்தார்.