விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் உட்பட நால்வர் கைது
24 Mar,2018
பொல்கஹாவெல பிரதேசத்தில் 50 லட்சம் ரூபா பெறுமதியான 500 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 4 பேரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் அங்கவீனமுற்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் என விசேட அதிரடிப்படையினர் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அவர் கூறியுள்ளார். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.