தமிழர்களை என்றும் அடக்கி ஆழவே ஆசைப்படும் சிங்களவர்கள்!
12 Feb,2018
சிறிலங்காவின் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரியுள்ளார்.
உள்ளூராட்சி தேர்தலில் பாரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில், மஹிந்தவின் கோரிக்கை வெளியாகி உள்ளது.
தேர்தலின் மகத்தான வெற்றி குறித்து பிரித்தானிய ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போது காணப்படுகின்ற நாடாளுமன்றத்தில் பிரதமர் பதவி வழங்கப்பட்டாலும் தான் அதனை ஏற்றுக் கொள்ள போவதில்லை என மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் முடிவுகளை தொடர்ந்து அரசாங்கத்தில் உறுதியற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த உறுதியற்ற நிலையில் இருந்து மீட்டுக் கொள்வதற்கு வலுவான அரசாங்கம் ஒன்றை உருவாக்க மக்கள் வரம் ஒன்றை கோர வேண்டும் என்றே தனக்கு தோணுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் மஹிந்த தலைமையிலான கட்சி பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.
இதன்மூலம் தமிழர்களை எப்போதும் அடங்கி ஆளும் தலைமைகளை சிங்களவர்கள் விருப்புவதையே தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டுக்கின்றன.
தற்போதைய அரசாங்கம் தமிழர்களுக்கு அதிகாரங்களை வழங்குவதற்கு தயாராக உள்ளனர் என்ற கோஷத்தை முன்வைத்தே மஹிந்த தரப்பினர் பிரச்சாரம் செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.