கஜேந்திரகுமார் பொய்யான குற்றச்சாட்டை என் மீது சுமத்துகிறார் : ஆனந்தசங்கரி!
08 Dec,2017
தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கிளிநொச்சியில் இன்றையதினம்(08) ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில் இன்று நண்பகல் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த ஆனந்தசங்கரி....
வடக்கு கிழக்கு இணைப்பு, சமஷ்டி முறையிலான அதிகார பகிர்வு தொடர்பில் தாம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், கஜேந்திரகுமார் பொய்யான குற்றச்சாட்டை தன்மீது சுமத்துவதாகவும் தெரிவித்தார்.
சமஸ்டி முறை பகிர்வினை முன்னுரிமைப்படுத்தி போட்டியிட்ட ரணிலிற்கு வாக்களிக்க வேண்டாம் என தெரிவித்து ஒற்றையாட்சியாளராகிய மகிந்த ராஜபக்ஷவை வெற்றிபெற செய்தது இவர்கள் செய்த மிக பெரும் தவறு என குறிப்பிட்டார்.
எனினும் இவ்விடயங்கள் தொடர்பில் கஜேந்திரகுமார் போன்று அவர் மீதுள்ள பல உண்மைகளை கூற முடியும்.
ஆனால் தான் அதை விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை தற்போது ரணில் விக்ரமசிங்க இங்கு வேட்பாளர்களை நியமிக்கும் அளவிற்கு எமது அரசியல் நிலை காணப்படுகின்றது.
அவை தொடர்பில் கதையுங்கள். பொய்யான கருத்துக்களை கூறி எமது கட்சியையோ அல்லது என்மீது கரி பூசும் செயற்பாட்டில் ஈடுபட வேண்டாம் எனவும் குறிப்பிட்டார்.