இந்தோனேசியாவில் 19 இலங்கையர்கள் கைது!
10 Nov,2017
வீசா நடைமுறையை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இந்தோனேசியாவில் 19 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுலா பயணிகளாக சென்ற அவர்கள், லிப்ப என்ற கிராமத்தில் தங்கியிருந்த போதே கைது செய்யப்பட்டனர்.
சுற்றுலாப்பயணிகளாக சென்ற அவர்கள், ஹோட்டலில் தங்குவதற்கு பதிலாக கடந்த மூன்று தினங்களாக வீடுகளில் தங்கியிருந்துள்ளனர்.
அதிகாரிகள் விசாரணை செய்த போது தாம் இந்தோனேசியாவில் நிரந்தர விசாவை பெற்றுள்ளதாக குறித்த இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் விசாரணைகளின் நிமித்தம் 19 இலங்கையர்களினதும் கடவுச்சீட்டுக்கள் இந்தோனேசிய அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.