தலைவர் பிரபாகரன் கொடுத்த மணிக்கூட்டை மைத்திரியிடம் கொடுத்த இமானுவேல்
26 Oct,2017
தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை, ஒரு முறை காணச் சென்றவேளை. அவர் தனது மணிக்கூட்டை களற்றி, இமானுவேல் அடிகளார் கைகளில் கொடுத்தார். அப்போது புலிகள் பலமாக இருந்த கால கட்டம். அன்றைய தினம், புலிகளே தமிழர்களின் ஏக பிரதி நிதிகள் என்று வீர வசனம் பேசினார் இமானுவேல். ஆனால் இன்று எது பலமாக இருக்கிறதோ. அதன் பக்கம் சாய்ந்துவிட்டார்.
ஒட்டு மொத்தத்தில் புலம்பெயர் தேசங்களில் வாழும் பல பிரபரலங்கள், அரசியல் புரிவோர் மற்றும் செயல்பாட்டாளர்கள் இவ்வாறு சிங்களவர் பக்கம் சாய்ந்து வருகிறார்கள். சமீபத்தில் இலங்கை சென்று வந்த இமானுவேல் அடிகளாரை, அவரது நண்பர் ஒருவர் சந்திக்கச் சென்றுள்ளார். அவர் கைகளில், தலைவர் கொடுத்த மணிக்கூடு இல்லை என்கிறார் அவர். எப்பொழுது அதனைக் கட்டிக் கொண்டு , இது தலைவர் கொடுத்த மணிக்கூடு என்று பலருக்கு தன்னை பெருமையாகச் சொன்ன அவர் தற்போது மணிக்கூடு இல்லாமல் உலா வருகிறார்.
மணிக்கூட்டை களற்றி மைத்திரி கையில் கொடுத்தாரா ? இல்லை மானத்தை களற்றி வைத்து விட்டு இலங்கை சென்றாரா தெரியவில்லை. ஆனல் தன் மானத்தை இழந்து. சுய மரியாதையையும் இழந்து நிற்கிறார். இந்த நிலை இவ்வாறு இருக்க, டென்மார்க் நாட்டில் ரகசியமாக ஒரு கூட்டத்தை கூட்டி சில புலம் பெயர் குழுக்கள். நிலை குறித்து ஆராய்ந்துள்ளார்களா. இது வேறு. நாடுகள் வாரியாக சிலரை அழைத்து, சில பொறுப்புகளை கொடுத்து அதனை செய்யும் படி கூறியுள்ளார்கள்.
சில புலம்பெயர் தமிழர்கள், பொறுப்புக்கும் , பதவிக்கும் , மேடைக்கும் மட்டுமே அலைகிறார்கள். ஆனால் வேறு சிலர் செல்பி எட்டுக்க அலைகிறார்கள். MP க்களோடு. இதுவும் எமது விடுதலையை நோக்கிய பாதை என்று கூறுகிறார்கள். ஆனால் அது அவர்களின் தனிப்பட்ட ஆசையாக உள்ளது.