யாழ். வீதியிலிருந்த பிள்ளையார் சிலையை சேதப்படுத்திய விசமிகள்!
17 Oct,2017
மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள பிள்ளையார் சிலை ஒன்றை அடையாளந்தெரியாதோரால் சேதமாக்கப்பட்டுள்ளது.
தள்ளாடி இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள ஓடுபாதையின் முன் வீதியில் பல வருடங்களாகக் காணப்பட்ட சிலையே சேதமாக்கப்பட்டுள்ளது.
கோவிலின் மேற்கூரையை உடைத்து பிள்ளையார் சிலையை வௌியில் எடுத்து சேதமாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே இரண்டு தடவைகள் குறித்த கோவில் உடைக்கப்பட்டுள்ளதாகவும் மூன்றாவது முறையாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, நாயாற்று வழி மற்றும் செம்மண் தீவு ஆகிய பகுதிகளிலும் நேற்றைய தினம் பிள்ளையார் சிலைகள் சேதமாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.