சட்டவிரோதமான முறையில் ஜேர்மனி செல்ல முயற்சித்த பெண் கைது
17 Oct,2017
சட்டவிரோதமான முறையில் ஜேர்மனி செல்ல முயற்சித்த இலங்கைப் பெண் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் கடவுச்சீட்டைத் தயாரித்து கட்டுநாயக்க வானூர்தி நிலையத்திலிருந்து ஜேர்மனி செல்வதற்காக கட்டாரில் இறங்கி (ட்ரான்சிட்) மாற்று வழிமூலம் செல்லத் தயாரான நிலையில், சோதனை நடவடிக்கையின் போது போலி கடவுச்சீட்டில் செல்ல முயன்றமை கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த பெண் முதல் கட்ட விசாரணைகளின் போது உரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பின்னர் இடம்பெற்ற விசாரணைகளின் போது தனக்கு வாய்பேச முடியாது என தெரிவித்துள்ளதாகவும் அவரை மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தியதாகவும், சிகிச்சையின் பின்னர் அவருக்கு வாய்பேச முடியும் என மருத்துவர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் இலங்கைக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளதோடு, தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சுவேலி பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு சர்ச்சைக்குட்பட்டுள்ளார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.