வைகோவை தாக்க முயன்ற சிங்களவர்கள்:
26 Sep,2017
ஐநா மனித உரிமை கவுன்சிலில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை பற்றி பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சிங்களவர்கள் சிலர் சூழ்ந்து கொண்ட தாக்குதல் நடத்த முயன்றதற்கு திமுக செயல் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில், ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை பற்றி பேசிய மதிமுக பொதுச்செயலாளர் அண்ணன் வைகோ அவர்களை, சிங்களவர்கள் சிலர் சூழ்ந்துகொண்டு தாக்க முயன்றதற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மனித உரிமைக் கவுன்சிலுக்கு உள்ளேயே, இந்தியாவில் இருந்து சென்ற ஒரு தமிழரின் மனித உரிமைக்கு எதிராக சிங்களர்கள் சிலர் இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டிருப்பது கவலையளிக்கிறது.
இதுகுறித்து, மத்திய அரசு உடனடியாக தனது கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.