தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு’ ஐ.நா முன்றலில் ஆர்ப்பாட்டப் பேரணி
19 Sep,2017
‘தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு’ எனும் தொனிப்பொருளில் ஐ.நா முன்றலில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.
இப்பேரணியில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், தியாகராஜா, ஆ.புவனேஸ்வரன் மற்றும் முன்னாள் உறுப்பினர் மயூரன் உட்பட பெருந்திரளான தமிழ் மக்களும் திரண்டிருந்தனர்.