இன்டர்போல் பட்டியலிலிருந்து 150 இலங்கையர்களின் பெயர்கள் நீக்கம்!
17 Sep,2017
இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்டு வரும் 150 இலங்கையர்களின் பெயர்கள் நீக்கப்பட்டமைக்கான காரணம் வெளியாகி உள்ளதாக குறிப்பிடும் சிங்கள இணையம் என்ன காரணத்திற்காக நீக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளது. .
இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்டு வரும் 150 இலங்கையர்களின் பெயர்கள் நீக்கப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது கொழும்பு சிங்கள ஊடகமொன்று இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மற்றும் தமிழீழ விடுதுலைப் புலி உறுப்பினர்கள் 50 பேர் உள்ளிட்ட 150 குற்றவாளிகளின் பெயர்கள் அண்மையில் இன்டர்போலால் தேடப்பட்டு வருவோர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருந்தன 150 பேரின் பெயர் விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கமே குறிப்பிட்டவர்களின் பெயர்களை நீக்கும்படி இன்டர்போல் பொலிசாருக்கு அறிக்கை கொடுத்திருப்பதாகத் தெரிகிறது.அதில் குறிப்பிட்டுள்ள நபர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.