கோடிஸ்வரரான மீனவர்.! கடற்படையினர் செய்த அதிர்ச்சி காரியம்.!!
17 Sep,2017
இலங்கையின் கற்பிட்டி என்ற கடற்பரப்பில் மீன்பிடிக்கும் செயலில் ஈடுபட்டிருந்த மீனவர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் பற்றி தகவல் வெளியாகி உள்ளது.
கடலில் மிதந்து வந்த அம்பரை ( திமிங்கலத்தின் வாந்தி) அவர்களுக்கு கிடைத்ததின் மூலம் அந்த மீனவர்கள் கோடிஸ்வரராகி உள்ளனர்.
மீனவர்களால் மீட்கப்பட்ட அம்பர் பலகோடி ரூபாய் விலைமதிப்பு கொண்டது என தெரியவந்துள்ளது.
ஒரு கிலோ அம்பர் ஒரு கோடி ரூபாய் வரை விற்பனை செய்யபடுகிறது. இந்த அம்பரை பயன்படுத்தி வாசனை திரவியங்கள் உட்பட பல்வேறு தயாரிப்புகள் மேற்கொள்ளபடுகிறது.
இதனையடுத்து மீனவர்களிடமிருந்து கடற்படையினரால் அம்பர் பறிமுதல் செய்யபட்டுள்ளது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் கடற்படையினருக்கு எதிராக வழக்கு கொடுக்கபோவதாக தகவல் வெளியாகி உள்ளது.
வறுமையில் உள்ள மீனவர்கள் ஒரே நாளில் கோடிஸ்வரரான் நிலையில் இலங்கை கடற்படையினர் அவர்களி ஏமாற்றியுள்ளனர்.
இதனால் அந்த பகுதி மீனவர்கள் பெரும் அதிருப்தி நிலையில் உள்ளனர்.