மகிந்தவின் மகன்!! காணிகளை கொள்வனவு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன?
15 Sep,2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ சற்றுமுன்னர் பொலிஸ் நிதி மோசடிப் பிரிவில் (எப்.சி.ஐ.டி) முன்னிலையாகியுள்ளார். யோஷித்த கல்கிசை மற்றும் இத்மலானை பகுதிகளில் காணிகளை கொள்வனவு செய்தமை அதில் ஒரு காணியில் அதிசொகுசு வீடொன்றினை நிர்மாணித்தமை தொடர்பில் இன்று விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவித்தன.
ல்கிசை மிஹிந்து மாவத்தையில் 31 பேர்ச் காணியை கொள்வனவு செய்தமை, இரத்மலானை கெக்கடிய பிரதேசத்தில் 31.5 பேர்ச் காணியில் அதிசொகுசு வீடொன்றினை நிர்மாணித்தமை மற்றும் அதற்கான பணத்தை உழைத்த, செலவளித்த விதம் தொடர்பிலும் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதேவேளை, யோஷித ராஜபக்ஷவுக்கு கடந்த 12ம் திகதி பொலிஸ் நிதி மோசடிப் பிரிவு அழைப்பு விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.