வர்த்தக கைத்தொழில் சந்தை எனும் மாபெரும் கண்காட்சி
08 Sep,2017
வர்த்தக கைத்தொழில் சந்தை எனும் மாபெரும் கண்காட்சி [
திருகோணமலை மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வர்த்தக கைத்தொழில் சந்தை எனும் மாபெரும் கண்காட்சி இன்று 08.09.2017 திருகோணமலை இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரிவவதி கலபத்தி ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு கண்காட்சியை திறந்து வைத்தார்.
திருகோணமலை மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவரும் கிழக்கு மாகாண வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் இணைத் தலைவருமான குலதீபன் சி.ஈ.சி நிறுவனத்தின் பணிப்பாளார் ஸ்பென்சர் விக்டர் மற்றும் உள்னாட்டு வெளினாட்டு வர்த்தகர்கள் பலர் பங்கேற்றனர்
குறித்த வர்த்தக சந்தையானது இம்மாதம் 8,9 மற்றும் 1௦ ஆகிய மூன்று தினங்களில் முன்னெடுக்கப்பட இருப்பதுடன் உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தொழித்துறைகள் தொடர்பான கண்காட்சிக் கூடங்கள் 82 நிறுவப்பட்டிருப்பட்டுள்ளது
இதன்மூலமாக பின்னடைவிலுள்ள திருகோணமலை மாவட்டத்தின் தொழில்த்துறையினை மட்டுமல்லாது கிழக்கு மாகாணத்தின் தொழில்த்துறையில் பாரிய ஒரு முன்னேற்றத்தினை அடைவதற்கான ஒரு சிறந்த முயற்சியாக இது அமைந்துள்ளது.