முள்ளிவாய்க்காலில் நாள் ஒன்றிற்கு இரண்டு குண்டுகள் வெடிக்கின்றன! அச்சத்தில் மக்கள்
27 Jul,2017
............................
முள்ளிவாய்க்காலில் எட்டுவருடங்களுக்கு மேலாக யுத்த காட்சியாக காணப்பட்ட தமது சொந்த நிலங்களை சீராக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதன் போது அங்கே நாள் ஒன்றிற்கு குறைந்தது இரண்டு குண்டுகள் வெடிக்கின்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதிகளில் அபாயகரமான வெடிபொருட்கள் இருக்கக்கூடும் என்று அச்சமடைந்த மக்கள் எவருக்கும் உயிரிழப்பு அல்லது காயங்கள் ஏற்படாதவகையில் பாதுகாப்பாக இந்த நடவடிக்கையை செய்துவருவதாக தெரிவித்துள்ளனர்.
இதன்படி காணிகளில் காணப்படும் பற்றைகளை வெவ்வேறு இடமாக குவித்த பொதுமக்கள் அவை அனைத்திற்கும் ஒரே நேரத்தில் தீவைத்தபின்னர் உடனடியாக அவ்விடத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
இவ்வாறு யுத்த பிரதேசதமாக காணப்பட்ட தமது காணிகளை துப்பரவாக்கும் பணியில் பொதுமக்கள் தொடர் நாட்களாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த பிரதேசத்தில் நாள் ஒன்றிற்கு குறைந்தது இரண்டு குண்டுகள் வெடிக்கின்றன. இக் குண்டுகள் வெடிப்பதனால் தங்களால் சிரமதானப் பணிகளை மேற்கொள்வதில் அச்சத்தை எதிர் நோக்குவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்