தமிழர்கள் மீது அடக்குமுறைக்கான முஸ்தீபே சரத்பொன்சேகாவிற்கு வழங்கப்படும் புதிய பதவி .
29 Apr,2017
........................
அமைச்சர் சரத் பொன்சேகாவிற்கு இராணுவம் பொலிஸ் அடங்கலாக புதிய பதவி வழங்கப்படவுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
அரசின் முக்கிய நோக்கம் சரத் பொன்சேகாவை நியமித்து அவர் யுத்த காலத்தில் முப்படைகளின் கட்டளைத்தளபதியாக இருந்து திறம்பட அடக்கு முறைகளை கையாண்டவர் என்பதால் தற்போது நாட்டில் பல முனைகளிலும் போராட்டங்களை மக்கள், தொழிற்சங்கங்கள் நடத்தி வருவதால் இவற்றை இராணுவ அடக்கு முறை மூலம் முன்னைய அரசு எவ்வாறு சரத் பொன்சேகாவை வைத்து அடக்கு முறையை அடக்கியதோ அதையே இன்றைய அரசும் நிகழ்த்தப் போகின்றது என்பதில் ஜயமில்லை.
குறிப்பாக வடக்கு பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு புரியும். ஏன் எனில் இன்று மக்கள் அகிம்சா வழியில் தமது நிலத்தையும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளையும் மீட்டு எடுப்பதில் ஹர்த்தால், உண்ணாநோன்பு ஆர்ப்பாட்டம் போன்றவற்றை அரசுக்கு எதிராக நடத்தி வருகின்றனர்.
எனவேதான் இச் செயல்ப்பாடுகளை அடக்குவதற்கு சரத் பொன்சேகாவின் நியமனம் அமையப்போகின்றது என வைத்திய கலாநிதி சி.சிவமோகன் கடும் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்