இராணுவத்தின் இரகசிய சித்திரவதை முகாம் அம்பலம்! மனித புதைகுழியில் ஆய்வு!

19 Feb,2017
 

..................
             

 
கொழும்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் நடத்தப்பட்ட இரகசிய சித்திரவதை முகாம் பற்றிய புதிய தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகளிலேயே இந்த திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கொழும்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் நடத்தப்பட்ட இரகசிய சித்திரவதை முகாம் பற்றிய புதிய தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகளிலேயே இந்த திருப்பம் ஏற்பட்டுள்ளது.
    


மொறக்கொட்டாஞ்சேனை மனித புதைகுழியில் நாளை ஆய்வு!
 

 
மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமுக்கருகே மனித எச்சங்கள் காணப்பட்ட இடத்தைச் சூழ நாளையும் நாளை மறுதினமும் மேலதிக ஆய்வுகள் இடம்பெறவுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமுக்கருகே மனித எச்சங்கள் காணப்பட்ட இடத்தைச் சூழ நாளையும் நாளை மறுதினமும் மேலதிக ஆய்வுகள் இடம்பெறவுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
    

மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் தடயங்கள் காணப்பட்ட இடத்துக்கு இம்மாதம் 2ஆம் திகதி விஜயம் செய்த மேலதிக நீதிவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி, சிரேஷ்ட வைத்திய நிபுணர் எம்.சிவசுப்பிரமணியம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய நிபுணர் பி.சி.சுரங்க பெரேரா, கண்டி வைத்தியசாலை வைத்திய நிபுணர் அஸித்த கீர்த்தி, மாத்தளை பொது வைத்தியசாலை வைத்திய நிபுணர் டி.ஐ.வைத்தியலங்கார, புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரி ஜே.ஏ.ரி.வி.பிரியந்த ஆகியோர் அடங்கிய விஷேட குழு அங்கு விசாரணை நடத்தியிருந்ததோடு, நாளைய தினம் குறித்த இடத்தை அகழ்ந்து ஆய்வுசெய்ய தீர்மானித்துள்ளது.

இதன் பிரகாரம் நாளை விசேட பாதுகாப்புக்கு மத்தியில் குறித்த பிரதேசத்தை சூழவும் ஆய்வு நடத்துவதற்கு ஏற்பாடாகியுள்ளது. மட்டக்களப்பு – கொழும்பு பிரதான நெடுஞ்சாலை அருகே முறக்கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள இராணுவ முகாம், கடந்த 1990ஆம் ஆண்டு முதல் இயங்கி வருவதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த இடத்தின் பெரும்பாலான காணிகளையும் பொது மக்களின் குடிமனைகளையும் அரசாங்க பாடசாலையையும் கைப்பற்றியிருந்த படையினர், தாம் கைப்பற்றியிருந்த காணிகளில் ஒரு பகுதியை கடந்த 2014ஆம் ஆண்டு மீளவும் ஒப்படைத்திருந்தனர். அவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகளில் ராணுவ முகாம் வேலியுடன் சேர்ந்ததாக உள்ள காணியில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் வீடு கட்டும்போது கடந்த 30.10.2016 அன்று எலும்பு எச்சங்களும் டயர் மற்றும் புகையிரத சிலிப்பர் கட்டைகளை எரித்த கரிகளும் தென்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதிவான், வைத்திய அதிகாரிகள் கொண்ட குழுவினர் சென்று ஆய்வு நடத்தியதோடு, வீடமைப்பு பணிகளையும் தற்காலிகமாக கைவிடுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. இதேவேளை கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் பகுப்பாய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

2008ம் ஆண்டு மே மாதம், தி நேசன் இதழின் இணை ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மூன்று அதிகாரிகளை நேற்று முன்தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்துக்கு அழைத்திருந்தனர். மேஜர் பிரபாத் புலத்வத்த, சார்ஜன்ட் துமிந்த வீரரத்ன, சார்ஜன்ட் ஹேமச்சந்திர பெரேரா ஆகிய மூன்று அதிகாரிகளிடமும், இரவிரவாக நடத்தப்பட்ட விசாரணைகளுக்குப் பின்னர், நேற்றுக்காலை கைது செய்யப்பட்டனர்.

அதேவேளை, இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மேலும் மூன்று அதிகாரிகள் குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊடகத்துறையைச் சேர்ந்தவர்கள் கொலை செய்யப்பட்டமை, கடத்தப்பட்டமை, தாக்கப்பட்டமை குறித்து, விசாரணைகளை நடத்தும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்புப் பிரிவு ஒன்றே இவர்களைக் கைது செய்துள்ளது. சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை, ரிவிர ஆசிரியர் உபாலி தென்னக்கோன் தாக்கப்பட்டமை குறித்தும் இந்தக் குழு விசாரணை நடத்தி வருகிறது.

கைது செய்யப்பட்ட மூன்று இராணுவப் புலனாய்வு அதிகாரிகளும் நேற்று கல்கிசை நீதிமன்ற மேலதிக நீதிவான் பெர்னான்டோவின் இல்லத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டனர். அப்போது, தெகிவளையில் உள்ள வதிவிடத்துக்கு அருகில் வைத்து கீத் நொயாரைக் கடத்திய சந்தேக நபர்கள், தொம்பேயில் உள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவு மறைவிடம் ஒன்றுக்கு கொண்டு சென்று சித்திரவதை செய்துள்ளனர் என்று, சந்தேக நபர்களை முன்னிலைப்படுத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் நிசாந்த சில்வா, மேலதிக நீதிவானிடம் தெரிவித்துள்ளார்.

தனது நாளிதழில் வெளியிட்ட தகவல்களை வழங்கியவர்கள் யார் என்று அவர்கள் கீத் நொயாரிடம் இருந்து அறிந்து கொள்ள முயன்றனர். அவரை கொல்வதற்கும் சந்தேகநபர்கள் திட்டமிட்டிருந்தனர். எனினும் முக்கிய பிரமுகர் ஒருவரிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பை அடுத்து, அவரை தூக்கிச் சென்று வதிவிடத்துக்கு அருகே வீசிவிட்டுச் சென்றனர்” என்றும் ஆய்வாளர் நிசாந்த சில்வா, குறிப்பிட்டார்.

அதேவேளை, இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் சார்பில் முன்னிலையான சட்டவாளர், நொயர் சாட்சியமளிப்பதற்கு நாட்டில் இல்லை என்றும், தமது கட்சிக்காரர்கள் அரசியல் ரீதியாக பழிவாங்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இதையடுத்து, சந்தேக நபர்கள் மூவரையும் மார்ச் 3ம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான், சந்தேக நபர்களை வரும் 23ம் நாள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவிட்டார். அதேவேளை, கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் முன்னைய ஆட்சிக்காலத்தில் மருதானையில் இயங்கிய திரிபொலி சந்தை என்ற முகாமில் இருந்து செயற்பட்ட இரகசிய இராணுவப் புலனாய்வு பிளட்டூனைச் சேர்ந்தவர்கள் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேவேளை, மேலும் மூன்று சந்தேக நபர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவு தலைமையகத்தில், ஏனைய தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். இதையடுத்து மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என்று குற்றப்புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, மேஜர் ஒருவர் உள்ளிட்ட மூன்று இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன உறுதிப்படுத்தியுள்ளார். இவர்கள் அனைவரும் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர் குறிப்பிட்டார். இந்த விடயத்தில், காவல்துறை கோரும் உதவிகளை இராணுவம் வழங்கும் என்றும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies