வவுனியாவில் கோரக் கொலை: செய்தது சிங்கள ராணுவமா ? இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்கவேண்டாம்
12 Jan,2017
வவுனியாவில் கோரக் கொலை: செய்தது சிங்கள ராணுவமா ? இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்கவேண்டாம்
வவுனியா தேக்காவத்தைப் பகுதியில் மயானத்திற்குச் செல்லும் வீதியில் வீடு ஒன்றில் பாட்டியுடன் வாடைக்கு குடியிருந்த வந்த பாலரஞ்சன் பாலநிஷாந்தன் என்ற, இருபத்தைந்து வயதுடைய குடும்பஸ்தர் இன்று பிற்பகல் இறந்துள்ளார். முன் வீட்டில் வசித்து வந்த நபர், வேறு ஒரு நபரின் உதவியோடு இவரை கொடூரமாக தலையில் தாக்கி கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இத்தவகவலை சரியாக ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை.
சிங்கள ராணுவ புலனாய்வுப் பிரிவில் இருக்கும், ஒரு நபரின் உதவி பெறப்பட்டே இக் கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட இளைஞர் திருமணமானவர் என்றும். அவரது மனைவி நயினா தீவில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இன் நிலையில் இவர் ஏன் வந்து வவுனியாவில் தங்கினார் என்ற பல சந்தேகங்கள் உள்ளது என்கிறார்கள் விடையம் அறிந்த வட்டாரத்தினர்.
இது தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள். விரைவில் உண்மைகள் வெளியாக உள்ளது.