அகதி அந்தஸ்த்து பெற்ற தமிழர்களையும் திருப்பி அனுப்பும் நடவடிக்கை தீவிரம் !!
14 Dec,2016
லண்டனில் அகதி அந்தஸ்த்து பெற்ற தமிழர்களையும் திருப்பி அனுப்பும் நடவடிக்கை தீவிரம் -வீடு தேடி வரும் கடிதங்கள்!!
பிரித்தானியாவில் குடிவரவு குடியகல்வு தினைக்களதினால் விசா தொடர்பான சில அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன .
அதன் பிரகாராம் அகதி தஞ்ச நிரந்தர விண்ணப்பங்களை ஏற்படுத்தியவர்களுக்கு பல காலமாக நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பித்து காத்து கொண்டிருந்த ஒரு சிலருக்கும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் கடிதங்கள் அனுப்பி வைக்க பட்டுள்ளன .
அந்த கடிதத்தில் தாங்கள் இவர்களது அகதி அந்தஸ்தை நிறுத்துவதற்கான முடிவை எடுப்பதற்கு உத்தேசித்துள்ளதாகவும் அதன் காரணத்தையும் அதனை விண்ணப்ப தாரர்கள் நிராகரிப்பதற்காக இருந்தால் உடனடியாக அதன் காரணங்களை எழுத்து வடிவில் உடனடியாக அனுப்பி வைக்கும் படியும் கூறியுள்ளனர்.
இவர்களது அந்தஸ்து சட்டவிதி 1c of the Refugee Convention கீழ் இவர்களது அகதி தஞ்சம் நிராகரிக்க படவுள்ளதாக கூறியுள்ளனர்
தங்களது விண்ணப்ப காரர்கள் திருப்பி அனுப்பபட்டால் அவர்களது உயிருக்கு ஆபத்து இல்லை என்பதாக கணித்துள்ளனர்.
இப்போது இலங்கையில் சுமுகமான நிலவரங்கள் காணப்படுவதால் இந்த முடிவு எட்டுவதற்கு கராணமாக அமைந்துள்ளது .
அத்துடன் அவர்களது வழக்குகளும் மீண்டும் பரிசிலித்த போது அங்கு அவர்களுக்கு பிரச்னைகள் இருக்க படமாட்டாது என கணிக்கபட்டுள்ளது .
இவர்களது அகதி அந்தஸ்தை பறிக்க படுவதாக இருந்தால் UNCHRக்கு அனுப்ப கூடாது என்பதனை பரிந்துரைப்பதற்கான சந்தர்ப்பமும் வழங்க படுகிறது.
இந்த முடிவு எல்லோருக்கும் எடுக்கப்படமாட்டாது எனவும் ஒரு சிலருக்கு மட்டும் அவர்களது வழக்குகளின் தன்மைகளிலேயே இந்த முடிவுகள் எடுக்க படுகின்றன .
எனவே விண்ணப்ப தாரர்களே உங்களுடைய முகவரிகள் மாற்ற பட்டாலோ அன்றி சட்டத்தரணி முகவரிகள் மற்ற பட்டாலோ உடனடியாக குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கும் படியும் கேட்க பட்டுள்ளது .
யாராவது பிழையான , தகவலின் அடிப்படையில் அகதி அந்தஸ்து பெற்றிருந்தாலோ ,அல்லது கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டிருந்தால் அவரகளது அந்தஸ்துக்களும் பறிக்க படலாம் என கூற பட்டுள்ளது