பிரபாகரனின் அடையாள அட்டையை நினைவுப்பொருளாக
18 Sep,2016
பிரபாகரனின் அடையாள அட்டையை நினைவுப்பொருளாக வைத்திருக்கும் கமால் குணரத்ன
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அடையாள அட்டையை தாமே நினைவுப் பொருளாக எடுத்து வைத்திருப்பதாக மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த தகவலை, கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்றிடம் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன கூறியுள்ளார்.
மேலும், பிரபாகரனின் உடல் தகனம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் இருந்து நான் ஒரு நினைவுப் பொருளை எடுத்துக் கொண்டேன் என்றும் அதற்குப் பின்னர் அங்கிருந்து விலகி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த நினைவுப் பொருள் பிரபாகரனின் அடையாள அட்டை அதனை நான் இன்றும் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.
வருங்காலத்தில் அதனை இராணுவ அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பதாகவும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன குறிப்பிட்டார்.
இதேவேளை, இறுதிக்கட்டப் போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கொன்ற 53 ஆவது டிவிசனுக்கு மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தலைமை தாங்கியமை குறிப்பிடத்தக்கது.