சிறையில் தாக்கப்பட்ட பேரறிவாளனுடன் அற்புதம்மாள் சந்திப்பு - உரிய சிகிச்சைக்கு வல்லியுறுத்தல்!
13 Sep,2016
வேலூர்: வேலூர் சிறையில் இன்று தாக்கப்பட்ட பேரறிவாளனை அவரது தாயார் அற்புதம்மாள் நேரில் சந்தித்தார். அப்போது பேரறிவாளனுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார் பேரறிவாளன். பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.ஆனால் இதில் மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இதனிடையே பேரறிவாளன் வேலூர் சிறையில் சக ஆயுள் தண்டனை கைதி ராஜேஷ் கண்ணா என்பவரால் கொடூரமாக இரும்பு கம்பியால் தாக்கப்பட்டார்.இதில் பேரறிவாளனுக்கு கையில் பயங்கர காயம் ஏற்பட்டது. அவருக்கு கையில் 6 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைக் கேள்விப்பட்ட பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் உடனடியாக வேலூர் சிறைக்கு விரைந்தார்.அங்கு பேரறிவாளனை சந்தித்து என்ன நடந்தது என கேட்டறிந்தார். பின்னர் சிறை அதிகாரிகளிடம் பேரறிவாளனுக்கு உரிய சிகிச்சை அளிக்க வலியுறுத்தினார்.அப்போது சிறைக்குள் அனுமதிக்காததால் பத்திரிகையாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.