மயூரன் தண்டனை தினம் குறித்து எதிர்வரும் சில தினங்களுக்குள் அறிவிக்கப்படும்- இந்த மாதம் நிறைவேற்றப்பட மாட்டாது
07 Mar,2015
இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலிய தமிழருக்கான தண்டனை இந்த மாதம் நிறைவேற்றப்பட மாட்டாது என்று இந்தோனேசியாவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் மயூரன் சுகுமாரன் என்ற அவுஸ்திரேலிய தமிழருக்கு இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அவரை காப்பாற்றுவதற்காக அவுஸ்திரேலியா அரசாங்கம் முன்வைத்த திட்டங்களையும் இந்தோனேசியா நிராகரித்துள்ளது.
இந்த நிலையில் அவருக்கான தண்டனை நிறைவேற்றப்படும் தினம் குறித்து எதிர்வரும் சில தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்த மாதம் இந்த தண்டனை நிறைவேற்றக்கூடிய சாத்தியம் இல்லை என்று இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்