சுவிஸ் வங்கிகளில் இருக்கும் மகிந்தாவினரின் பணம் பறிபோகுமா? .
18 Jan,2015
சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை சுவிஸ் வங்கிகளில் வைப்பிலிடுவதை தடுக்க சுவிஸ்லாந்து சட்டம் ஒன்றை தயாரித்துள்ளதாக தெரியவருகிறது.
கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் சுவிஸ் வங்கிகளில் வைப்புச் செய்துள்ள இலங்கையர்களின் கணக்கு அறிக்கைகளும் ஆராயப்பட உள்ளதாக தெரியவருகிறது. ராஜபக்ஷ குடும்பத்தினர் கடந்த காலங்களில் முறைகேடாக சம்பாதித்த பணம் சுவிஸ் வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இலங்கையர்கள் வைப்பிலிடுட் விதமாக இந்த பணம் வைப்புச் செய்யப்படவில்லை. சீசல்ஸ் நாட்டு பிரஜைகள் வைப்புச் செய்வது போல் சுவிஸ் வங்கிகளின் இந்த பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாக சுவிஸ் வங்கிகளில் சீசல்ஸ் நாட்டவர்கள் பணத்தை வைப்புச் செய்வது அதிகரித்துள்ளதாக பொருளாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதேவேளை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றிய 350 கிலோ கிராம் தங்கத்தை ஜப்பானுக்கு விற்பனை செய்தாக ராஜபக்ஷவினர் மீது குற்றம் சுமத்தப்படுகிறது.
இந்த தங்கத்தை விற்பனை செய்வதற்கான இடைதரகராக செயற்பட்டது சுவிஸ் நிறுவனம் ஒன்று என்பது ஆச்சரியத்திற்குரிய விடயம். இந்த கொடுக்கல் வாங்கலின் பெறுமதி 400,000,000 மில்லியன் ரூபா என தெரியவருகிறது.
இந்த பெருந்தொகை பணம் இலங்கையில் உள்ள எந்த வங்கியிலும் வைப்புச் செய்யப்படவில்லை என தெரியவருகிறது. இதனிடையே சுவிஸ் வங்கிகளில் இலங்கையர்கள் 98 மில்லியன் டொலர்களை வைப்புச் செய்துள்ளதாக சுவிஸர்லாந்து மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.