தொடரும் வன்னியில் வலிசுமந்த மாணவர்களுக்கான உதவித்திட்டம்-குமுளமுனை பலநோக்கு கூட்டுறவுச் சங்க தேர்தலில் மோசடி
20 Sep,2014
குமுளமுனை பலநோக்கு கூட்டுறவுச் சங்க தேர்தலில் மோசடி முயற்சி - நீதிமன்றத்தால் தடையுத்தரவு பிறப்பிப்பு
ரைதுறைப்பற்று கூட்டுறவுச் சங்க தேர்தலில் அனைத்து கிளை சங்க பேராளர் தெரிவு முடிவடைந்த போதிலும் குமுளமுனை கிளைகளில் மட்டும் பேராளர்; தெரிவு பிற்போடப்பட்டிருந்தது. மேற்படி விடயத்தில் கூட்டுறவு ஆணையாளர்களின் செயல்பாடு தேர்தல் உப விதிகளுக்கு முரணானது என்றும் சட்டத்திற்கு புறம்பாக குமுள முனை கிளை ஒன்றில் ஒட்டப்பட்ட வாக்காளர் அங்கத்துவ பட்டியலில் கூட்டுறவு ஆணையாளர்கள் மாற்றம் செய்ய முற்படுவதாகவும் கூறி பொது மக்களால் முல்லை மாவட்ட நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம் 02.10.2014 வரை குமுளமுனை யு கிளைக்குரிய பேராளர் தெரிவு கூட்டத்திற்கு தடைவிதித்து 18.09.2014 அன்று தீர்ப்பளித்தது. செய்தியாளர் - மின்னல் வன்னியிலிருந்து
ஊடகங்கள் விபரங்களை உறுதிப்படுத்துவதற்காக:-
ராஜேஸ்வரன் (பொதுமகன்) – 0775915575, கனகேஸ்வரன் (வழக்காளி) – 0776148300, பாலகிரு~;ணண் (சட்டவாளர்) - 0777576258
தொடரும் வன்னியில் வலிசுமந்த மாணவர்களுக்கான உதவித்திட்டம்
இலங்கை இந்து பேரவையின் நிதியுதவியுடன் வன்னி குறோஸ் சுகாதார நிறுவனத்தின் ஒழுங்குபடுத்தலில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் மேற்படி நிகழ்வு நடைபெற்றது. இதில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க. சுரேஸ் பிரேமச்சந்திரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந. சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி. சிவமோகன், இலங்கை இந்து பேரவை வவுனியா மாவட்ட இணைப்பதிகாரி திரு. சுதாகரன் ஆகியோர் பங்குபற்றினர். இதில் வலிசுமந்த மாணவர்கள் 100 இற்கும் மேற்பட்டவர்களுக்கான பாடசாலை உபகரண தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டன.