நவ்று முகாமில் இருந்து ஒரு தொகுதி பேரை ஏற்கத் தயாராகும் அவுஸ்திரேலியா
17 Aug,2014
நவ்று தடுப்பு முகாமில் இருந்து ஒரு தொகுதி புகலிடக் கோரிக்கையாளர்கள் கம்போடியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நவ்ரு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் மொரிசன் மிகவும் இரகசியமான முறையில் இந்த புகலிடக் கோரிக்கையாளைர்களை அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது பற்றிய முழுமையான விபரங்களை எடுப்பதற்க்கான அனைத்து வழிகளையும் மொரிசன் முடக்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் எந்த நாட்டு புகலிடக் கோரிக்கையாளர்கள் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பது இதுவரைக்கும் வெளியாகவில்லை.
ஈராக்கிய, சிரிய அகதிகள் 4,400 பேரை ஏற்கத் தயாராகும் அவுஸ்திரேலியா
ஈராக்கிலும், சிரியாவிலும் வன்முறைகளால் இடம்பெயர்ந்தவர்களை தமது நாட்டில் மீளக் குடியமர்த்த அவுஸ்திரேலியா தயாராகிறது.
இந்த நாடுகளைச் சேர்ந்த 4,400 பேரை அவுஸ்திரேலியாவில் மீளக்குடியமர்த்த தமது நாடு முன்வந்திருப்பதாக குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்தார்.
அகதிகள் மற்றும் விசேட மனிதாபிமான திட்டத்தின் கீழ், ஒவ்வொரு நாட்டில் இருந்தும் 2,200 பேருக்கு அவுஸ்திரேலியாவில் மீளக்குடியமரும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
தற்போது புகலிடக் கோரிக்கையாளர்களுடன் வரும் படகுகள் நிறுத்தப்பட்டதால், அந்த இடங்கள் வெற்றிடமாகியுள்ளதாக அமைச்சர் மொரிசன் குறிப்பிட்டார்.
ஈராக்கில் நீடிக்கும் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தமது வருடாந்த மனிதாபிமான அகதிகள் திட்டத்தில் ஈராக்கிய கிறிஸ்தவர்களுக்கும், யஸீதிகளுக்கும் வாய்ப்பளிப்பதென தீர்மானித்ததாக அவர் கூறினார்.
அவுஸ்திரேலியாவின் வருடாந்த திட்டத்தின் கீழ் 13இ750 இடங்கள் இருக்கின்றன. மிகவும் மோசமான நிலைமை காரணமாக இடம்பெயர்ந்து கட்டாயமாக மீளக்குடியமர வேண்டிய நிலையில் இருப்பவர்களுக்காக இவற்றில் 4,000 ற்கு மேலான வீசாக்கள் ஒதுக்கப்படுகின்றன.