தொலைக்காட்சிப் பெட்டி விழுந்து 4 வயது சிறுமி மரணம்
03 Dec,2013
தொலைக்காட்சிப் பெட்டி விழுந்து 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு பெரியகல்லாறு பிரதேசத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
என்.ஆரக்ஷியா (வயது 4) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வீட்டினுள் விளையாடிக் கொண்டிருந்த இச்சிறுமி மீது தொலைக்காட்சிப் பெட்டியுடன் அதன் நிறுத்தி சரிந்து விழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமி உடனடியாக கல்லாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
எனினும், சிகிச்சை பலனின்றி சிறுமி மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.
சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.