கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி அறிமுகம்
27 Aug,2022
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட கருமபீடமொன்று திறக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்கள் தம்முடைய பணிகளை எவ்வித இடையூறும் இன்றி குறித்த விசேட கருமபீடம் ஊடாக துரிதமாக மேற்கொள்ள முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையிலிருந்து வெளிநாடு செல்வோருக்காகவே இந்த விசேட திட்டம் கொண்டு வரப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய லங்கா ரெமிட் மொபைல் செயலி (Lanka Remit Mobile Application) வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு இன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
லங்கா ரெமிட் மொபைல் செயலியின் பயன்பாடு சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுப் பணம் இலங்கைக்கு அனுப்பப்படுவதைக் குறைக்க உதவும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பேச்சாளரும் பிரதி பொது முகாமையாளருமான காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.